"இந்தியா 65 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகும்".. வைரலான மார்ஷ் கணிப்பு.. கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

Nov 18, 2023,05:47 PM IST

அகமதாபாத்: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 65 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி விடும் என்று ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் மிட்சல் மார்ஷ் கூறியுள்ளார். இது இந்திய ரசிகர்களிடையே கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அவரை ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.


உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இதில் மோதவுள்ளன. இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு அணிகளுமே முன்னாள் சாம்பியன்கள்தான். 


இந்தியா வென்றால் அந்த அணிக்கு இது 3வது உலகக் கோப்பை. ஆஸ்திரேலியா வென்றால் அதற்கு 6வது உலகக் கோப்பை. இந்த நிலையில் ஆஸ்திரேலியா ஆல் ரவுண்டர் மிட்சல் மார்ஷ் முன்பு கூறியிருந்த ஒரு கணிப்பு வைரலாகி வருகிறது.




உலகக் கோப்பை குறித்து இந்த ஆண்டு மே மாதம் மிட்சல் மார்ஷ் கருத்து தெரிவித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில் இறுதிப் போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெறும். ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 450 ரன்களைக் குவிக்கும்.  இந்தியா 65 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகும். ஆஸ்திரேலியா கோப்பையை வெல்லும் என்று கூறியிருந்தார் அவர்.


அவர் சொன்னபடி இறுதிப் போட்டிக்கு இரு அணிகளும் தகுதி பெற்றுள்ளதால், மார்ஷ் கணிப்பு இப்போது வைரலாகி வருகிறது. ஆனால் இந்திய ரசிகர்கள், மார்ஷை கழுவிக் கழுவி ஊற்றி வருகின்றனர். இந்தத் தொடரில் தோல்வியே காணாத அணியாக இந்தியா வலம் வந்தது. ஆனால் ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியிலேயே இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியது. அடுத்த போட்டியிலும் அது தோல்வியைத் தழுவியது. அரை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் தட்டுத் தடுமாறித்தான் வெல்ல முடிந்தது.


ஆனால் இந்தியா எந்தப் போட்டியிலும் சிரமப்படவில்லை. மாறாக அட்டகாசமான முறையில் அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது என்று ரசிகர்கள் குத்திக் காட்டி மார்ஷை துவம்சம் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்