மு.க.ஸ்டாலின் பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்.. பரூக் அப்துல்லா புகழாரம்

Mar 02, 2023,01:11 PM IST
சென்னை: திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், பிரதமர் பதவியில் தாராளமாக அமரலாம். அதற்கு அவர் பொருத்தமானவர் என்று ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.



சென்னையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. விழாவின் முக்கிய அம்சமாக மாலையில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த பரூக் அப்துல்லாவிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த பரூக் அப்துல்லா கூறுகையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து தேர்தலை சந்தித்தால்தான் பாஜகவை வெல்ல முடியும். அப்படி வெல்லும்போது பிரதமர் பதவிக்கு மு.க.ஸ்டாலினைக் கூட அமர்த்தலாம். அதற்கு  அவர் பொருத்தமானவர்.




2024 தேர்தலை எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து சந்தித்தால் மட்டுமே மக்களை பிரிவினைவாத சக்திகளிடமிருந்து காப்பாற்ற முடியும். எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்கு வலிமையான தலைவர் தேவை. அதற்கு ஸ்டாலின் பொருத்தமானவர்.

ஏன் ஸ்டாலின் பிரதமராகக் கூடாது.. அவருக்கு தகுதி இல்லையா என்ன.. தாராளமாக  அவர் பிரதமராக முடியும். திமுகவும், மு.க.ஸ்டாலினும் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள்.  தேசிய ஒற்றுமைக்குத் தேவையான வலிமையைக் கொடுக்கக் கூடிய தகுதி திமுகவுக்கு உண்டு என்றார் பரூக் அப்துல்லா.

எதிர்க்கட்சிகளிடம் இதுதான் மிகப் பெரிய குறையாக இருக்கிறது. பிரதமர் பதவிக்கு ஏகப்பட்ட பேர் போட்டியில் உள்ளனர். நிதீஷ் குமாருக்கும் ஆசை இருக்கிறது. மமதா பானர்ஜிக்கும் ஆசை உண்டு. சந்திரசேகர ராவுக்கும் பிரதமர் பதவி மீது கண் உண்டு. இந்த நிலையில் போட்டியில் மு.க.ஸ்டாலினையும் இழுத்து விட்டுள்ளார் பரூக் அப்துல்லா.

மறுபக்கம் நரேந்திர மோடிதான் அடுத்த முறையும் பிரதமர் என்று பாஜக தெளிவாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி எப்படி அமையும், அது வலுவாக இருக்குமா என்பது தேர்தல் நெருங்க நெருங்கத்தான் தெரியும்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்