சென்னை: வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். எஸ்ஐஆர் நணிகள் விவகாரத்தில் பாதி கிணறு தாண்டிவிட்டோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2026ம் ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் தத்தமது கட்சிப்பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் இந்த கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. காலை 10 மணியளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட செயலாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் திமுக மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்துத் தினந்தோறும் மாலை நேரங்களில் நிர்வாகிகளிடம் நிறுவன ரீதியான விவரங்களைக் கேட்டு வருகின்றேன். வரும் 16-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகவிருக்கும் நிலையில், திமுக நிர்வாகிகள் அதனை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். பொதுமக்கள் பட்டியலில் பெயர் விடுபட்டால் அதனைச் சேர்ப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் பல்வேறு அறிவுறுத்தல்களை நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளார்.
திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?
TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?
விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்
குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்
அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?
கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க
தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு
ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்
மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு
{{comments.comment}}