சென்னை: திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று ஈரோட்டில் இருந்து தனது முதல் கட்ட சூறாவளி பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சியை சார்ந்த தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றனர். திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் கட்சி இடம் பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள இக்கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கவில்லை. அதற்கு பதிலாக மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்குவதாக இரு கட்சிகளும் உடன்பாடு செய்து கொண்டுள்ளன.

அந்த நேரத்தில் இது பற்றி விளக்கம் அளித்து கமல்ஹாசன் கூறுகையில், நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. இந்திய கூட்டணிக் கட்சிக்கு ஆதரவளித்து தேர்தல் பிரச்சாரம் செய்யப் போகிறேன். நான் எங்கு சேர வேண்டுமோ அங்கு தான் சேர்ந்து இருக்கிறேன். இது எனது பதவிக்கான விஷயம் கிடையாது. நாட்டுக்கான விஷயம் என கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் இன்று ஈரோட்டில் இருந்து தனது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன். திமுக வேட்பாளரை ஆதரித்து, உதய சூரியன் சின்னத்தில் வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், வெப்படை, உள்ளிட்ட இடங்களில் இன்று வாக்கு சேகரிக்க இருக்கிறார்.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}