சென்னை: திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று ஈரோட்டில் இருந்து தனது முதல் கட்ட சூறாவளி பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சியை சார்ந்த தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றனர். திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் கட்சி இடம் பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள இக்கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கவில்லை. அதற்கு பதிலாக மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்குவதாக இரு கட்சிகளும் உடன்பாடு செய்து கொண்டுள்ளன.

அந்த நேரத்தில் இது பற்றி விளக்கம் அளித்து கமல்ஹாசன் கூறுகையில், நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. இந்திய கூட்டணிக் கட்சிக்கு ஆதரவளித்து தேர்தல் பிரச்சாரம் செய்யப் போகிறேன். நான் எங்கு சேர வேண்டுமோ அங்கு தான் சேர்ந்து இருக்கிறேன். இது எனது பதவிக்கான விஷயம் கிடையாது. நாட்டுக்கான விஷயம் என கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் இன்று ஈரோட்டில் இருந்து தனது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன். திமுக வேட்பாளரை ஆதரித்து, உதய சூரியன் சின்னத்தில் வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், வெப்படை, உள்ளிட்ட இடங்களில் இன்று வாக்கு சேகரிக்க இருக்கிறார்.
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு? - வதந்தி என.. மத்திய அரசு விளக்கம்!
விதைக்குள் காடு விரும்பி அதை நாடு!
நெருங்குதலும் விலகலும்
Dr Latha poems: அமைதியே என் ஆயுதம்.. நான் என உறுதி கொள்!
English Language Day: வில்லியம் ஷேக்ஸ்பியரை நினைவு கூர்ந்து Thanks சொல்வோம்!
{{comments.comment}}