ஈரோட்டிலிருந்து.. இன்று முதல் சூறாவளி பிரச்சாரம்..  தொடங்குகிறார் ம.நீ.ம. தலைவர்.. கமல்ஹாசன்!

Mar 29, 2024,10:50 AM IST

சென்னை: திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று ஈரோட்டில் இருந்து தனது  முதல் கட்ட சூறாவளி பிரச்சாரத்தை தொடங்குகிறார். 


லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சியை சார்ந்த தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றனர். திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் கட்சி இடம் பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள இக்கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கவில்லை. அதற்கு பதிலாக மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்குவதாக இரு கட்சிகளும் உடன்பாடு செய்து கொண்டுள்ளன.




அந்த நேரத்தில் இது பற்றி விளக்கம் அளித்து கமல்ஹாசன் கூறுகையில், நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. இந்திய கூட்டணிக் கட்சிக்கு ஆதரவளித்து தேர்தல் பிரச்சாரம் செய்யப் போகிறேன். நான் எங்கு சேர வேண்டுமோ அங்கு தான் சேர்ந்து இருக்கிறேன். இது எனது பதவிக்கான விஷயம் கிடையாது. நாட்டுக்கான விஷயம் என கூறியிருந்தார்.


இந்த சூழ்நிலையில் இன்று ஈரோட்டில் இருந்து தனது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன். திமுக வேட்பாளரை ஆதரித்து, உதய சூரியன் சின்னத்தில் வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், வெப்படை, உள்ளிட்ட இடங்களில் இன்று வாக்கு சேகரிக்க இருக்கிறார்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்