சென்னை: திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று ஈரோட்டில் இருந்து தனது முதல் கட்ட சூறாவளி பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சியை சார்ந்த தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றனர். திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையம் கட்சி இடம் பெற்றுள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள இக்கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கவில்லை. அதற்கு பதிலாக மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு தொகுதி ஒதுக்குவதாக இரு கட்சிகளும் உடன்பாடு செய்து கொண்டுள்ளன.
அந்த நேரத்தில் இது பற்றி விளக்கம் அளித்து கமல்ஹாசன் கூறுகையில், நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. இந்திய கூட்டணிக் கட்சிக்கு ஆதரவளித்து தேர்தல் பிரச்சாரம் செய்யப் போகிறேன். நான் எங்கு சேர வேண்டுமோ அங்கு தான் சேர்ந்து இருக்கிறேன். இது எனது பதவிக்கான விஷயம் கிடையாது. நாட்டுக்கான விஷயம் என கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் இன்று ஈரோட்டில் இருந்து தனது முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன். திமுக வேட்பாளரை ஆதரித்து, உதய சூரியன் சின்னத்தில் வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், வெப்படை, உள்ளிட்ட இடங்களில் இன்று வாக்கு சேகரிக்க இருக்கிறார்.
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}