தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு.. "வாழ்த்துகள்".. அசத்திய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்!

Feb 03, 2024,11:37 AM IST

சென்னை: நடிகர் விஜய் புதிதாக ஆரம்பித்துள்ள கட்சிக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் தலைவர் கமலஹாசன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, இன்று எடுத்துள்ள முடிவுக்கு பாராட்டுக்களும், வரும் 2026ல் தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு  வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்.


நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இந்தக் கட்சிக்கு  தமிழக வெற்றி கழகம் என்ற பெயரிட்டுள்ளனர். விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள், தொண்டர்கள், என அனைவரும் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.


இந்நிலையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் விஜய் தொடங்கிய புதிய கட்சியை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்




இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


வெளிநாடு சென்றுள்ள மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் நம்மவர். கமலஹாசன் அவர்கள் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள, நடிகர் விஜய் அவர்களுக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்தார்.


இன்று எடுத்துள்ள முடிவுக்கு பாராட்டுகளும், வரும் 2026ல் தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சமீப காலத்தில் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கி தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கியிருக்கிறார் கமல்ஹாசன். அவரது தீவிர ரசிகரும், அவர் மீது நிறைய அன்பு வைத்துள்ளவருமான விஜய் தற்போது கமல் பாணியில் அரசியலில் குதித்திருப்பது இரு தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரு தரப்பும் கை கோர்த்து அரசியல் பாதையில் நடை போடும் வாய்ப்பு வருமா என்ற எதிர்பார்ப்பும் எட்டிப் பார்த்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்