தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை.. 13, 14 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..!

May 10, 2025,02:20 PM IST

 சென்னை:தமிழகத்தில் இன்று முதல் 16ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 13 மற்றும் 14ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் கத்திரி வெயில் என சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கி, வெயிலின் தாக்கத்துடன் வெப்ப அலையும் வீசி வருகிறது.மதிய வேலைகளில் வெயில் கொளுத்துகிறது.

இருப்பினும் அவ்வப்போது பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஒரு சில இடங்களில் கோடை மழையும் பெய்து வருகிறது. 




இந்த நிலையில் தற்போது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நீடித்து வருகிறது. அதேபோல் தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 16ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், 13 மற்றும் 14ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

11 மற்றும் 12 ஆம் தேதியில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.


13ஆம் தேதி கனமழை: 


நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், ஆகிய ஆறு மாவட்டங்களில் 13ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. 


13ஆம் தேதி மிதமான மழை: 


தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.


14ஆம் தேதி கன மழை: 

நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆகிய ஐந்து மாவட்டங்களில் 14ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. 


14ஆம் தேதி மிதமான மழை: 

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.


15 மற்றும் 16 தேதிகளில், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 


இன்று சென்னையில் மழை: 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது. 


இதற்கிடையே தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வருகின்ற 13-ம் தேதி வாக்கில் 10 நாட்கள் முன்கூட்டியே துவங்க கூடும் எனவும், கேரளாவில் தென்மேற்கு பருவ மழை 4 நாட்களுக்கு  முன்கூட்டியே வரும் 27ஆம் தேதி துவங்கக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்திய நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு.. ஜூலை 16ல் ஏமனில் மரண தண்டனை?.. கவலையில் குடும்பம்!

news

அதிகரித்து வரும் காற்று மாசு.. திக்கித் திணறும் தலைநகர் டெல்லி.. கவலையில் மத்திய அரசு!

news

Bharat Bandh: நாடு முழுவதும் 25 கோடித் தொழிலாளர்கள் ஸ்டிரைக்.. முடங்கும் முக்கிய சேவைகள்!

news

காமத் தீயில் வெந்து போனது காமுகனின் மனசு.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!

news

2 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 09, 2025... இன்று நல்ல நேரம் தேடி வரும் ராசிக்காரர்கள்

news

பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?

news

அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி

news

வாய்க்கு வந்ததை வாக்குறுதி என அளித்துவிட்டு, மக்களையும் ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி!

news

21 நாட்களில் பணம் இரட்டிப்பு.. பெங்களூரைக் கலக்கிய கேரள தம்பதி தலைமறைவு.. அதி நவீன மோசடி!

அதிகம் பார்க்கும் செய்திகள்