நவீன இந்தியாவை வளர்த்த பெருமை.. நான்கு குஜராத்திகளுக்கே.. அமித்ஷா பேச்சு

May 19, 2023,12:28 PM IST
டெல்லி: நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கு நான்கு குஜராத்திகள்தான் மிக முக்கியக் காரணம் என்று கூறியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர அவர்கள் என்று அமித் ஷா புகழ்ந்து பேசியுள்ளார்.

டெல்லி குஜராத்தி சமாஜ் அமைப்பின் 125வது ஆண்டு நிறைவுதின விழாவில் கலந்து கொண்டு அமித் ஷா பேசும்போது இப்படிக் கூறினார்.



பிரதமர் நரேந்திர மோடியால் இந்தியாவின் புகழ் உலகம் முழுவதும் பரவி வருகிறது.  மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், மொரார்ஜி தேசாய், நரேந்திர மோடி ஆகிய நான்கு குஜராத்திகள் இந்தியாவின் நவீன வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள்.

குஜராத் சமுதாயம் இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பரவிக் காணப்படுகிறது.  அனைத்து சமுதாயத்தினருடனும் இணைந்து குஜராத்திகள் வாழ்கின்றனர். சமூகத்துக்கு அவர்கள் ஆற்றும் சேவை மிகப் பெரியது.

மகாத்மா காந்தி நாடு விடுதலை அடைய உதவினார். சர்தார் வல்லபாய் படேலால் நாடு ஒன்றிணைந்தது.  நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுத்த பெருமை மொரார்ஜிக்கு உண்டு. இன்று பிரதமர் நரேந்திர மோடியால்உலகம் முழுவதும் இந்தியா க ண்டாடப்படுகிறது.

குஜராத்திகளின் சாதனை மிகப் பெரியது. அவர்களுக்காக நாடு பெருமைப்படுகிறது. டெல்லியில் வாழும் குஜராத்திகள் தங்களது கலாச்சரத்தை விட்ட விடாமல் நாகரீகத்தை விட்ட வடிாமல்தொடர்ந்து கசடைப்பிடிககன்றனற்.  இதன் மூலம் பிற சமுதாயத்தினருக்கும் முன்னுதாரணமாகவிளங்குகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மோடி பிரதமராக வந்தபோது உலக அளவில் நமது நாட்டின் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது. இன்று 5வது மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக நாம் உயர்ந்திருக்கிறோம்.

விமானப்படை நடத்திய சர்ஜ்ஜிகல்ஸ்டிரைக் உள்ளிட்டவற்றால் பிரதமர் மோடி தனது தலைமைத்துவத்தை நிரூபித்துள்ளார். இந்தியாவின் எல்லைப் பகுதியில் யாரும் வாலாட்ட முடியாது என்ற வலுவான செய்தியை உலகுக்குக் கொண்டு சென்றுள்ளது.

கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்ட விதத்தை உலகமே பார்த்து அயர்ந்து போனது. 130 கோடி பேர் கொண்ட மிகப் பெரிய நாட்டில் மிக மிக நேர்த்தியாக கொரோனா தடுப்பூசி  திட்டம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

தீவிரவாதத்திற்கு எதிராக பிரதமர் மோடி மிகக் கடுமையாக நடந்து வருகிறார். தீவிரவாதம் அடியோடு அழிக்கப்பட்டுள்ளது.  கடந்த 9 ஆண்டுகளில் ஒரு தீவிரவாதத் தாக்குதல் கூட நாட்டில் நடந்ததில்லை என்று பேசினார் அமித்ஷா.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்