என்னது...இந்தியா பெயரை மாத்தப் போறாங்களா?

Sep 05, 2023,12:24 PM IST
டில்லி : இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடர் செப்டம்பர் 18 ம் தேதி துவங்கி, 21 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் பெயரை மாற்றுவது தொடர்பாக முடிவை முன்னெடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றுவது தொடர்பான தீர்மானத்தை பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்ற மோடி அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 



இந்த தகவலை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷூம் தனது ட்விட்டர் போஸ்டில் உறுதி செய்துள்ளார். அவர் தனது போஸ்டில், ஜி20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது. அதில், President of Bharat என குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக President of India என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தியா என்ற பெயரை மாற்ற அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுவது உண்மை தான் என குறிப்பிட்டுள்ளார்.

ஜி 30 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விருந்தில் கலந்த கொள்ள தனக்கு மத்திய அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழையும் அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அசாம் முதல்வர் ஹிமதா பிஸ்வா சர்மாவும் இதே தகவலை ட்விட்டரில் பகிர்ந்து, Republic of Bharat - கேட்பதற்கே நன்றாக உள்ளது. நமது நாடு தரமானதாக முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றன. பாஜகவிற்கு எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இ-ந்-தி-யா கூட்டணியால் பயம் வந்து விட்டது. அதனால் தான் நாட்டின் பெயரையே மாற்றும் அளவிற்கு சென்றுள்ளது என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் மிருத்யுஞ்ஜய் திவாரி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்