கோடீஸ்வரர் முகம்மது அல் பயத் மரணம்.. யார்னு தெரியுதா இவரை?

Sep 02, 2023,12:41 PM IST

லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரர் முகம்மது அல் பயத் காலமானார். அவருக்கு வயது 94. இளவரசி டயானாவுடன் கார் விபத்தில் மாண்டு போனாரே டோடி அல் பயத்.. அவரது தந்தைதான் முகம்மது அல் பயத்.


இங்கிலாந்தின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் முக்கியமானவர் முகம்மது அல் பயத். எகிப்தைப் பூர்வீகமாக கொண்ட இவர் இங்கிலாந்தில் தனது கடினமான உழைப்பால் மிகப் பெரிய வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். ரியல் எஸ்ட்டேட், கப்பல் வணிகம், கட்டுமானத்துறை என சகல துறைகளிலும் ஆழமாக கால் பதித்தவர்.




இங்கிலாந்தில் மட்டுமல்லாமல் மத்திய கிழக்கு, ஐரோப்பாவிலும் இவர் மிகப் பிரபலமான கோடீஸ்வரர் ஆவார். சாதாரண பிஸ்ஸி கூல்டிரிங்ஸ் வியாபாரியாகத்தான் இவரது வாழ்க்கை தொடங்கியது. தனது உழைப்பாலும், சாதுரியத்தாலும் மிகப் பெரிய கோடீஸ்வரராக மாறினார் முகம்மது அல் பயத்.


94 வயதான  முகம்மது அல் பயத், வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக லண்டனில் மரணமடைந்தார். இவரது மகன் டோடி அல் பயத், இளவரசி டயானாவுடன் நெருங்கிப் பழகி வந்தார். இருவரும் பிரான்ஸில் சுற்றுப்பயணம் செய்தபோதுதான் அவர்கள் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளாகி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம். மகன் இறந்து 26 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது தந்தையும் காலமாகியுள்ளார்.


எகிப்தின் அலெக்சான்ட்ரியா நகரில் பிறந்தவர் முகம்மது அல் பயத். இவர் என்னதான் இங்கிலாந்தில் குடியேறி, இங்கிலாந்துக்குப் பெருமை தேடிக் கொடுத்தாலும் கூட அந்த நாட்டில் இவர் ஒரு "வந்தேறி"யாகத்தான் பார்க்கப்பட்டார். எத்தனையோ அவமானங்கள் வந்தன. ஆனாலும் அதையும் தாண்டித்தான் இவர் ஜெயித்தார்.


ஹாரோட்ஸ், புல்ஹாம், பாரீஸ் ரிட்ஸ் ஹோட்டல் ஆகியவை இவரது அடையாளங்களாகும்.  இங்கிலாந்து அரசு குடியுரிமை வழங்க மறுத்து பிரான்சுக்குப் போய் விடுமாறு பலமுறை மிரட்டியது. காரணம், பிரான்ஸ் நாடு இவருக்கு அந்த நாட்டின் உயரிய விருதை அளித்துக் கெளரவித்த காரணத்தால்.  தனது மகனும், டயானாவும் போன கார் விபத்துக்குள்ளாகவில்லை. அது இங்கிலாந்து ராஜ குடும்பம் செய்த சதியே, அவர்கள்தான் தனது மகனையும், டயானாவையும் கொலை செய்து விட்டதாகவும் பரபரப்பு குற்றம் சாட்டி உலகையே அதிர வைத்தவர் முகம்மது அல் பயத்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்