கணுக்காலில் காயம்.. ஆபரேஷன் செஞ்சாகணும்.. ஐபிஎல் தொடரிலிருந்து முகமது ஷமி விலகல்!

Feb 22, 2024,06:31 PM IST

சென்னை: இந்திய நட்டத்திர வேகப்பந்து விச்சாளர் முகமது ஷமி கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.


ஐபிஎல்  கிரிக்கெட்டின்  17 ஆவது தொடர் விரைவில் தொடங்க உள்ளது. வரும் மார்ச் மாதம்  இறுதியில் இப்போட்டிகள் தொடங்க உள்ளதாக தெரிகிறது. இந்த தொடருக்கான போட்டி அட்டவணை இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 




இந்நிலையில்,ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகப்கோப்பை தொடரின் போது அசத்தலாக பந்து வீசி அதிரடி காட்டியவர் ஷமி.  அப்போது அவர் காயமடைந்த காரணத்தால், அதன்பின்னர் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து  அணிக்கு எதிரான தொடர்களிலிருந்து விலகினார் ஷமி.


தனது இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார் ஷமி. அதற்காக லண்டன் சென்று அவர் சிகிச்சை பெற்றார். சிறப்பு ஊசிகளையும் செலுத்திக்கொண்டார். இருப்பினும், அவர் பூரண குணம் பெறவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து அவருக்கு விரைவில் கணுக்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முகமது ஷமி நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகி இருப்பதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது.


சமீபத்தில் தான் இவருக்கு அர்ஜுனா விருது வழங்கிப்பட்டது.  33 வயதான முகமது சமி கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார் ஷமி. கடந்த 2 சீசன்களாக அவர் அசத்தலாக ஆடி வந்தார். 2022 தொடரில் 22 விக்கெட்களை வீழ்த்திய ஷமி, 2023 தொடரில் 23 விக்கெட்களைச் சாய்த்து அதிரடி காட்டினார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்