சென்னை: இந்திய நட்டத்திர வேகப்பந்து விச்சாளர் முகமது ஷமி கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் 17 ஆவது தொடர் விரைவில் தொடங்க உள்ளது. வரும் மார்ச் மாதம் இறுதியில் இப்போட்டிகள் தொடங்க உள்ளதாக தெரிகிறது. இந்த தொடருக்கான போட்டி அட்டவணை இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்,ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகப்கோப்பை தொடரின் போது அசத்தலாக பந்து வீசி அதிரடி காட்டியவர் ஷமி. அப்போது அவர் காயமடைந்த காரணத்தால், அதன்பின்னர் நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர்களிலிருந்து விலகினார் ஷமி.
தனது இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார் ஷமி. அதற்காக லண்டன் சென்று அவர் சிகிச்சை பெற்றார். சிறப்பு ஊசிகளையும் செலுத்திக்கொண்டார். இருப்பினும், அவர் பூரண குணம் பெறவில்லை என கூறப்படுகிறது. இதை அடுத்து அவருக்கு விரைவில் கணுக்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முகமது ஷமி நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் தான் இவருக்கு அர்ஜுனா விருது வழங்கிப்பட்டது. 33 வயதான முகமது சமி கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார் ஷமி. கடந்த 2 சீசன்களாக அவர் அசத்தலாக ஆடி வந்தார். 2022 தொடரில் 22 விக்கெட்களை வீழ்த்திய ஷமி, 2023 தொடரில் 23 விக்கெட்களைச் சாய்த்து அதிரடி காட்டினார் என்பது நினைவிருக்கலாம்.
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
{{comments.comment}}