சென்னை: நடிகர் மோகன்லால் இயக்குனராக அவதாரம் எடுத்து இயக்கிய பரோஸ் திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது.
மலையாளத் திரை உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவர் மலையாள மொழியில் இதுவரை நானூறு க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம்,ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் நடித்து அசத்தியுள்ளார்.

கேரளாவை தாண்டி தமிழ்நாட்டிலும் மோகன்லாலுக்கு நிறைய ரசிகர் பட்டாளம் உண்டு. நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகத் திறமைகள் கொண்ட கலைஞராக விளங்கிய மோகன்லால் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். மோகன்லால் முதன்முதலாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் தான் பரோஸ்.

இப்படம் 3d பிரம்மாண்ட பேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில் இப்படத்தை ஆசிர்வாத் சினிமா சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். இத் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே மோகன்லால் கூட்டணியில் இதுவரை 28 படங்களுக்கு மேல் வெளியாகி அப்படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது கூட்டணியில் மீண்டும் பிரம்மாண்ட படைப்பாக பரோஸ் திரைப்படம் உருவாகி இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் மார்க் க்ளியான் இப்படத்திற்கு ரீ ரிக்கார்டிங் செய்ய இளம் வயதிலேயே உலகப் புகழ் பெற்ற லிடியன் நாதஸ்வரம் இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பரோஸ் என்னும் பூதத்திற்கும் ஒரு பெண் குழந்தைக்கும் உள்ள உறவை பேண்டஸி கலந்து அனைவரும் ரசிக்கும் வகையில் மிக பிரம்மாண்ட படைப்பாக மோகன்லால் இயக்கிய பரோஸ் திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், என ஐந்து மொழிகளில் வெளியாக தயாராகி வருகிறது.

இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக பரோஸ் திரைப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மோகன்லால் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}