டெல்லி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமிக்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திடீரென டெல்லி புறப்பட்டார். இவரது இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது. ஏற்கனவே அதிமுக பாஜக மீண்டும் இணைய போவதாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பாஜக மூத்த தலைவர்களை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவா என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இதனால் இதற்கு விளக்கம் அளித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், டெல்லி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் ஐந்தாம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜகவை தொடர்ந்து தமிழ் மாநில தேசிய காங்கிரஸ் கட்சியும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் ரத்தம் இன்னும் காயவில்லை.. அதற்குள் பாகிஸ்தானுடன் விளையாட்டா?.. பிசிசிஐக்கு எதிர்ப்பு!
முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!
திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
{{comments.comment}}