டெல்லி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமிக்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திடீரென டெல்லி புறப்பட்டார். இவரது இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது. ஏற்கனவே அதிமுக பாஜக மீண்டும் இணைய போவதாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பாஜக மூத்த தலைவர்களை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவா என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இதனால் இதற்கு விளக்கம் அளித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், டெல்லி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் ஐந்தாம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜகவை தொடர்ந்து தமிழ் மாநில தேசிய காங்கிரஸ் கட்சியும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}