இயற்கைக்குப் புறம்பான உறவு.. பலாத்காரம் அல்ல.. ம.பி. ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

May 04, 2024,03:50 PM IST

ஜபல்பூர்: மனைவியுடன் இயற்கைக்குப் புறம்பான வகையில் உறவு வைத்துக் கொண்டால் அதை பாலியல் பலாத்காரமாக கருத முடியாது என்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது.


இந்த வகையான உறவு வைத்துக் கொண்டதற்காக மனைவி கொடுத்த புகாரின் பேரில், கணவர் மீது தொடரப்பட்ட வழக்கையும் ஹைகோர்ட் ரத்து செய்துள்ளது. இருவரும் கணவன் மனைவி. அவர்களுக்குள் நடக்கும் உறவை சட்டவிரோதமானது என்று கருத முடியாது. எனவே கணவர் எந்த மாதிரியான உறவை வைத்துக் கொண்டாலும் அதை பலாத்காரமாக கருத முடியாது என்றும் ஹைகோர்ட் கூறியுள்ளது.


சம்பந்தப்பட்ட நபரின் மனைவி போலீஸில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில் கணவர் தன்னுடன் இயற்கைக்குப் புறம்பான முறையில் உறவு வைத்துக் கொள்வதாக கூறியிருந்தார். இதன் பேரில் அந்தக் கணவர் மீது போலீஸார் பலாத்கார வழக்கைப் பதிவு செய்தனர். இதை எதிர்த்து கணவர் ஹைகோர்ட்டை அணுகினார். அதை விசாரித்த நீதிபதி ஜி.எல். அலுவாலியா அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:




இந்தியன் பீனல் கோட் 377ன் கீழ் இந்த இருவரும் கணவன் மனைவி. இவர்களுக்குள் நடைபெறும் உறவு சட்டத்திற்கு உட்பட்டது. அது எந்த வகையான உறவாக இருந்தாலும் அதை பாலியல் பலாத்காரமாக கருத முடியாது.  எனவே கணவர் மீது தொடரப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்கிறோம். திருமண உறவில் பலாத்காரம் என்பது இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது என்று நீதிபதி கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்