ஜபல்பூர்: மனைவியுடன் இயற்கைக்குப் புறம்பான வகையில் உறவு வைத்துக் கொண்டால் அதை பாலியல் பலாத்காரமாக கருத முடியாது என்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது.
இந்த வகையான உறவு வைத்துக் கொண்டதற்காக மனைவி கொடுத்த புகாரின் பேரில், கணவர் மீது தொடரப்பட்ட வழக்கையும் ஹைகோர்ட் ரத்து செய்துள்ளது. இருவரும் கணவன் மனைவி. அவர்களுக்குள் நடக்கும் உறவை சட்டவிரோதமானது என்று கருத முடியாது. எனவே கணவர் எந்த மாதிரியான உறவை வைத்துக் கொண்டாலும் அதை பலாத்காரமாக கருத முடியாது என்றும் ஹைகோர்ட் கூறியுள்ளது.
சம்பந்தப்பட்ட நபரின் மனைவி போலீஸில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில் கணவர் தன்னுடன் இயற்கைக்குப் புறம்பான முறையில் உறவு வைத்துக் கொள்வதாக கூறியிருந்தார். இதன் பேரில் அந்தக் கணவர் மீது போலீஸார் பலாத்கார வழக்கைப் பதிவு செய்தனர். இதை எதிர்த்து கணவர் ஹைகோர்ட்டை அணுகினார். அதை விசாரித்த நீதிபதி ஜி.எல். அலுவாலியா அளித்த தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
இந்தியன் பீனல் கோட் 377ன் கீழ் இந்த இருவரும் கணவன் மனைவி. இவர்களுக்குள் நடைபெறும் உறவு சட்டத்திற்கு உட்பட்டது. அது எந்த வகையான உறவாக இருந்தாலும் அதை பாலியல் பலாத்காரமாக கருத முடியாது. எனவே கணவர் மீது தொடரப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்கிறோம். திருமண உறவில் பலாத்காரம் என்பது இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது என்று நீதிபதி கூறியுள்ளார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}