கிளாம்பாக்கம் டூ கோயம்பேடு.. அதே ரூட்டுதான்.. பஸ் நம்பர் மட்டும் மாத்தியாச்சு.. நோட் பண்ணிக்கங்க!

Jul 26, 2024,05:49 PM IST

சென்னை: கிளாம்பாக்கம் -கோயம்பேடு மற்றும் கோயம்பேடு - கூடுவாஞ்சேரி பஸ்களின் எண்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


சென்னை ஒருங்கிணைந்த புறநகர் பேருந்து நிலையம் சென்னையின் மையப் பகுதியான பிராட்வேயில் ஒரு காலத்தில் இயங்கி வந்தது. ஆனால் அந்த இடம் மிகவும் நெரிசலாகி விட்டதால், அந்தப் பஸ் நிலையத்தை கோயம்பேட்டுக்கு மாற்றினர். மறைந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கோயம்பேடு பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் மற்றும் வெளி மாநிலப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.




ஆனால் இந்த பேருந்து நிலையப் பகுதியும் மக்கள் நெருக்கம் மற்றும் அதிகரிப்பு காரணமாக நெரிசலாகியது. இதையடுத்து இந்தப் பேருந்து நிலையத்தை மாற்றி கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்துக்கு தற்போது மாற்றியுள்ளனர். 


கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சிட்டியிலிருந்து வெகு தூரத்தில் இருப்பதால் இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் அதிக அளவிலான மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அப்படி இயக்கப்படும் 2 பேருந்துகளின் தடம் எண் தற்போது மாற்றப்பட்டுள்ளது. பஸ் நம்பர் மட்டுமே மாறியுள்ளது, மற்றபடி அதே ரூட்டில்தான் பஸ்கள் இயக்கப்படும்.


இதுதொடர்பாக  மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:


மாநகர் போக்குவரத்து கழகம் பொதுமக்களின் நலன் கருதி சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி வழக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. மேலும் ஒவ்வொரு வழித்தடத்திற்கும் ஒவ்வொரு தடம் என் வழங்கி பயணிகள் எளிதாக பயணம் செய்ய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.


தற்போது கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை இயக்கப்படுகின்ற தடம் எண் 104சி கட் பேருந்து தடம் எண் 104 சி என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும். அதேபோல் கோயம்பேடு முதல் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படுகின்ற தடம் எண் 104சி பேருந்து தடம் எண் 104 சி எக்ஸ் என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயங்கும் என மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்