பயணிகள் கவனத்திற்கு.. ஸ்டாப்பில் பஸ் நிற்கலையா.. செல்லை எடுங்க.. இந்த நம்பருக்கு டயல் பண்ணுங்க!

Apr 26, 2024,05:48 PM IST

சென்னை: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் போனால் உடனடியாக புகார் தருவதற்காக இலவச சேவை ஒன்றை போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.


சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்து சேவையை சிறப்பாக மேள்கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை போக்குவரத்துக் கழகம் தொடர்ந்து எடுத்து வருகிறது. இந்த நிலையில் புதிதாக ஒரு சேவையை அது அறிமுகப்படுத்தியுள்ளது.


பெரும்பாலான பயணிகளின் பொதுவான குறை என்னவென்றால் முக்கிய நேரங்களில் ஸ்டாப்பில் பஸ் நிற்காமல் போய் விடுகிறது என்பதுதான். குறிப்பாக பீக் ஹவர் நேரங்களில் இதுபோல நடப்பதால் மக்கள் பல்வேறு வகையில் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இதை சரி செய்யத்தான் தற்போது புதிய சேவை ஒன்றை போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.




அதன்படி, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் அட்டவணையிடப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தாமல் சென்றால் உடனடியாக 149 என்ற எண்ணுக்குப் போன் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் இலவசமான சேவையாகும்.


அந்த எண்ணுக்குப் போன் செய்து, வழித்தடம் எண், பக்கவாட்டு எண், அல்லது பதிவு எண், பேருந்து எங்கிருந்து எங்கு செல்கிறது, நேரம் மற்றும் நிறுத்தாமல் சென்ற பேருந்தின் பெயரை தெரிவிக்கலாம் என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்தத் தகவல்களை  94450 30516 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பஸ்கள் சரிவர செயல்படுவது உறுதி செய்யப்படும் என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்