சென்னைக்கு மீண்டும் வந்த 100 தாழ்தளப் பேருந்துகள்.. மாற்றுத்திறனாளிகளும் இனி ஜம்மென்று பயணிக்கலாம்!

Aug 04, 2024,12:00 PM IST

சென்னை:  சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் வாங்கப்பட்டுள்ள 100 தாழ்தளப் பேருந்துகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.


மாற்றுத்திறனாளிகளும் எளிதாக சிட்டி பஸ்ஸில் ஏறி இறங்குவதற்கு வசதியாக தாழ்தளப் பேருந்துகள் சென்னை பெருநகர போக்குரவத்துக் கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பேருந்துகளுக்கு பெரும் வரவேற்பும் கிடைத்தது. மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள், மூதாட்டிகள், கர்ப்பிணிகள் ஏறி இறங்குவதற்கு இது வசதியாக இருந்தது. ஆனால் 2018ம் ஆண்டுடன் இந்தப் பேருந்துகளை நிறுத்தி விட்டனர்.


இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தாழ்தளப் பேருந்துகளை மீண்டும் இயக்க கோர்ட் உத்தரவிட்டது. இதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும் கூட மக்களின் வசதிக்காக இதை மீண்டும் கொண்டு வர தமிழ்நாடு அரசும் முடிவெடுத்தது. புதிதாக தாழ்தளப் பேருந்துகள் வாங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி தற்போது 100 பேருந்துகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் 88 பேருந்துகள் புதிதாக வாங்கப்பட்டவை. 12 புதுப்பிக்கப்பட்டவை ஆகும்.




இந்தப் பேருந்தின் படிக்கட்டுக்கள் தாழ்வாக இருக்கும். அதாவது தரையிலிருந்து சிறிது உயரத்திலேயே இவை இருக்கும். இதனால் பயணிகள் ஏறுவது சுலபமாக இருக்கும். மேலும் சக்கர நாற்காலியுடன் வருவோர் இந்தப் படிக்கட்டிலேயே ஏறி உள்ளே செல்லவும் முடியும். அதாவது மெட்ரோ ரயில்களில் இருப்பது போல சக்கர நாற்காலியுடன் வருவோர் பயணிக்க தனி இட வசதியும் இந்தப் பேருந்தில் உள்ளது. பேருந்தில் மொத்தம் 35 இருக்கை வசதி உள்ளது. அதேசமயம், 70 பேர் வரை பஸ்சில் பயணிக்க முடியும். 


இதற்கு முன்பு தாம்பரம் - பிராட்வே, காஞ்சிபுரம் -சைதாப்பேட்டை, கோயம்பேடு - செங்குன்றம் மார்க்கத்தில் இந்தப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது இயக்கப்படவுள்ள மார்க்கங்கள் விரைவில் அறிவிக்கப்படும். படிப்படியாக பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.


சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்