சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் துணி எடுக்க, பொருட்கள் வாங்க மக்கள் அலை அலையாக கடைகளுக்குப் படையெடுத்து வருகின்றனர். இதனால் மக்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.
தீபாவளி நெருங்கி விட்டது. அக்டோபர் 31ம் தேதி தீபாவளி திருநாள் தமிழ்நாட்டில் கொண்டாடப்படவுள்ளது. மக்கள் ஜவுளிக் கடைகளுக்கும், நகைக் கடைகளுக்கும், பாத்திரக் கடைகள் உள்ளிட்ட இன்ன பிற கடைகளுக்கும் படையெடுத்து வருகின்றனர். தீபாவளி பர்ச்சேஸ் வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ளதால் கூட்ட நெரிசலும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
இடை இடையே மழை வந்தபோது சற்று தொய்வடைந்த பர்ச்சேஸ் தற்போது மழை இல்லாத நேரத்தில் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மக்கள் குடும்பம் குடும்பமாக துணி எடுக்க, பொருட்கள் வாங்க குவிந்து வருகின்றனர். இதே நிலைதான் மற்ற மாநகரங்களிலும் நிலவுகிறது.
இந்த நிலையில் மக்கள் நலனுக்காக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்குகிறது. இதுதொடர்பாக எம்டிசி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வார இறுதி நாட்களான 20.10.2024 (இன்று), 26.10.2024 மற்றும் 27.10.2024 ஆகிய மூன்று நாட்களுக்கு பயணிகள் வசதிக்காக தியாகராய நகர், புரசைவாக்கம், வள்ளலார் நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை (எம்.சி. ரோடு) ஆகிய இடங்களுக்கு காலை 06:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படும்.
கூடுதலாக இயக்கப்படும் வழித்தடங்கள் குறித்த விவரம்:
19, தி. நகர் - திருப்போரூர்
47ஏ, வில்லிவாக்கம் - திருவான்மியூர்
147சி, தி.நகர் - அம்பத்தூர் ஓடி
147ஏ, தி.நகர் - ஜேஜே நகர் கிழக்கு
120, ஆவடி - பிராட்வே
47, பெசன்ட் நகர் - வில்லிவாக்கம்
500, தாம்பரம் - செங்கல்பட்டு
51ஏ, தி.நகர் - தாம்பரம்
154, தி.நகர் - பூந்தமல்லி
64சி, பிராட்வே - மணலி
500பி, பல்லவாரம் - செங்கல்பட்டு
51, தாம்பரம் - வேளச்சேரி
3, தி.நகர் - திருவான்மியூர்
72, தி.நகர் - திருவேற்காடு
21ஜி, பிராட்வே - கிளாம்பாக்கம் பஸ் நிலையம்
ஜி18, தி.நகர் - கூடுவாஞ்சேரி
242, பிராட்வே - செங்குன்றம்
19ஏ, தி.நகர் - செம்மஞ்சேரி எஸ்சிபி
56சி, திருவொற்றியூர் - பிராட்வே
57, வள்ளலார் நகர் - செங்குன்றம்
எம்27, தி.நகர் - கோயம்பேடு பஸ் நிலையம்
33சி, பிராட்வே - கேகேடி நகர்
6டி, டோல்கேட் - திருவான்மியூர்
இ18, பிராட்வே - கூடுவாஞ்சேரி
12ஜி, கேகே நகர் - அண்ணா சதுக்கம்
5பி, தி.நகர் - மயிலாப்பூர்
159ஏ, திருவொற்றியூர் - கோயம்பேடு பஸ் நிலையம்
37, வள்ளலார் நகர் - பூந்தமல்லி
56ஏ, வள்ளளார் நகர் - பூந்தமல்லி
18ஏஎக்ஸ், பிராட்வே - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}