சென்னை: மார்ச் 3ம் தேதியன்று சென்னை தாம்பரம் முதல் கடற்கரை வரையிலான வழித்தடத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் 150 பேருந்துகளை கூடுதலாக இயக்குவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் தாம்பரம் முதல் கடற்கரை வரையிலான மார்க்கத்தில் ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் இது நடைபெற்று வருகிறது. இதையொட்டி சிறப்புப் பேருந்துகளை இயக்குமாறு மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு, தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி தற்போது 150 கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக எம்டிசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
03.03.2024 அன்று தென்னக இரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக, மா.போ.கழகம் சார்பாக காலை 10.00 மணி முதல் மாலை 15.30 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கெங்கு.. எத்தனை பேருந்துகள்?

அதன்படி 18ஏ பேருந்தானது, பிராட்வே முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்படும். 18ஜி வழித்தடத்தில் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும். 18ஏசிடி கிண்டி முதல் கிளாம்பாக்கம் வரையிலான வழித்தடத்தில் கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கப்படும்.
பி18 கொருக்குப்பேட்டை - தாம்பரம் மார்க்கத்தில் கூடுதலாக 30 பேருந்துகளும், இ18 பிராட்வே - கூடுவாஞ்சேரி மார்க்கத்தில் கூடுதலாக 20 பேருந்துகளும் இயக்கப்படும். ஜி18 தியாகராய நகர் - கூடுவாஞ்சேரி மார்க்க்தில் கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}