பயணிகளின் கவனத்திற்கு.. மார்ச் 3.. 150 எக்ஸ்ட்ரா பேருந்துகள்.. எம்டிசி சூப்பர் அறிவிப்பு!

Mar 02, 2024,10:31 PM IST

சென்னை: மார்ச் 3ம் தேதியன்று சென்னை தாம்பரம் முதல் கடற்கரை வரையிலான வழித்தடத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் 150 பேருந்துகளை கூடுதலாக இயக்குவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


சென்னையில் தாம்பரம் முதல் கடற்கரை வரையிலான மார்க்கத்தில் ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் இது நடைபெற்று வருகிறது. இதையொட்டி சிறப்புப் பேருந்துகளை இயக்குமாறு மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு, தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்திருந்தது.


அதன்படி தற்போது 150 கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக எம்டிசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

03.03.2024 அன்று தென்னக இரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக, மா.போ.கழகம் சார்பாக காலை 10.00 மணி முதல் மாலை 15.30 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கெங்கு.. எத்தனை பேருந்துகள்?




அதன்படி 18ஏ பேருந்தானது, பிராட்வே முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்படும்.  18ஜி வழித்தடத்தில் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும். 18ஏசிடி கிண்டி முதல் கிளாம்பாக்கம் வரையிலான வழித்தடத்தில் கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கப்படும். 


பி18 கொருக்குப்பேட்டை - தாம்பரம் மார்க்கத்தில் கூடுதலாக 30 பேருந்துகளும், இ18 பிராட்வே - கூடுவாஞ்சேரி மார்க்கத்தில் கூடுதலாக 20 பேருந்துகளும் இயக்கப்படும். ஜி18 தியாகராய நகர் - கூடுவாஞ்சேரி மார்க்க்தில் கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்