சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மக்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளை மாநகர் போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பல்வேறு பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ரயில் போக்குவரத்து இரவு நேரங்களில் நிறுத்தி வைத்து பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இன்று புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து எம்டிசி நிர்வாகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக எம்டிசி விடுத்துள்ள அறிக்கை:
பீச் - எழும்பூர்

28ம் தேதி தென்னக இரயில்வேயின் பராமரிப்பு பணிகள் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கும் பூங்கா ரயில் நிலையத்திற்கும் இடையே நடைபெற உள்ளது. இதனால் தென்னக ரயில்வே சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
பயணிகள் நலன் கருதி மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக காலை 07.00 மணி முதல் மாலை 07.45 மணி வரை கடற்கரை ரயில் நிலையம் முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
தாம்பரம் ரயில் நிலையம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 09.30 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக பல்லாவரம் பேருந்து நிலையம் முதல் கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஊர்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 02.00 மணி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
ஆதலால் காதல் செய்வீர்!
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Tamil Nadu Assembly elections: தமிழ்நாட்டில் 84.29% வாக்குப் பதிவு.. கரூர் மாவட்டத்தில்தான் உச்சம்!
தமிழ்நாடு முழுக்க வாக்குப் பதிவு விகிதம் அதிகரிக்க என்ன காரணம்.. சென்னையும் கலக்குதே!
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிங்க.. தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கோரிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், ரஜினி, கமல், அஜீத் ஓட்டுப் போட்டாச்சு!
{{comments.comment}}