தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. ஸ்பெஷல் பஸ்களை களம் இறக்கிய எம்டிசி

Jul 28, 2024,01:29 PM IST

சென்னை:  சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மக்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகளை மாநகர் போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.


சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பல்வேறு பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ரயில் போக்குவரத்து இரவு நேரங்களில் நிறுத்தி வைத்து பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இன்று புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து எம்டிசி நிர்வாகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக எம்டிசி விடுத்துள்ள அறிக்கை:


பீச் - எழும்பூர்




28ம் தேதி தென்னக இரயில்வேயின் பராமரிப்பு பணிகள் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கும் பூங்கா ரயில் நிலையத்திற்கும் இடையே நடைபெற உள்ளது. இதனால் தென்னக ரயில்வே சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து  இயக்கப்படும் என்று அறிவித்துள்ளது. 


பயணிகள் நலன் கருதி மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக காலை 07.00 மணி முதல் மாலை 07.45 மணி வரை கடற்கரை ரயில் நிலையம் முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.


தாம்பரம்  ரயில் நிலையம்


தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 09.30 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரையும், செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 


எனவே, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக பல்லாவரம் பேருந்து நிலையம் முதல் கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு ஆகிய ஊர்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 02.00 மணி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்