என்னா பஸ்ஸுய்யா.. "ஆமா,  இது மெட்ராஸா.. இல்லை லண்டனா".. வாய் பிளக்க ரெடியாகுங்க!

Aug 04, 2023,12:57 PM IST
சென்னை: சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பஸ்கள் ஓடப் போகின்றன. ஒரு காலத்தில் டபுள் டெக்கர் பஸ்கள் சென்னையின் அடையாளமாக இருந்தன. காலப் போக்கில் அவை வழக்கொழிந்து விட்டன. இப்போது மீண்டும் டபுள் டெக்கர் பஸ்கள் சென்னை சாலைகளில் ஓடப் போகின்றன.

கடந்த 70களில் சென்னையில் டபுள் டெக்கர் பஸ்கள் அறிமுகமாகின. ஆரம்பத்தில் பிராட்வே - தாம்பரம் இடையே இவை ஓடின. சென்னை நகரின் அடையாளமாக இவை திகழ்ந்து வந்தன. பல திரைப்படங்களில் டபுள் டெக்கர் பஸ்கள் இடம் பெற்று அவற்றின் மீதான கிரேஸையும் அதிகப்படுத்தியுள்ளன. பின்னர் இந்தப் பேருந்துகள் பராமரிப்பு சிரமம் காரணமாக நிறுத்தப்பட்டு விட்டன. அதைத் தொடர்ந்து டிரெய்லர் பஸ்கள் அறிமுகமாகின. இரண்டு பஸ்களை இணைத்து இந்த பஸ்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஆனால் குறுகிய சாலைகளில் இந்த பஸ்களை இயக்குவதில் சிரமம் ஏற்படவே இதையும் பின்னர் நிறுத்தி விட்டனர்.



சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் டபுள் டெக்கர்களை அறிமுகப்படுத்தினர். சென்னை உயர்நீதிமன்றம் - தாம்பரம் இடையே இந்த பேருந்து அறிமுகமானது. ஆனால் அதுவும் தாக்குப்பிடிக்கவில்லை. நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் மீண்டும் டபுள் டெக்கர் பஸ்கள் சென்னை சாலைகளில் ஓடவுள்ளன.

இந்த முறை அதி நவீன எலக்ட்க் டபுள் டெக்கர் பஸ்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இவற்றின் பராமரிப்பு மற்றும் இயக்கும் முறை மிகவும் எளிமையானது என்பதாலும், பார்க்க சூப்பராக உள்ளதாலும் இந்த பஸ்கள் நிச்சயம் மக்களின் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பஸ்களின் முக்கிய விசேஷமே இவை குளுகுளு வசதியுடன் கூடியவை என்பதுதான்.  மும்பையில் இதுபோன்ற பஸ்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளன. அதே வகையான பேருந்துகளைத்தான் சென்னையிலும் அறிமுகப்படுத்தவுள்ளனர். முதல் கட்டமாக மெரீனா கடற்கரை சாலையில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

லண்டனில்தான் டபுள் டெக்கர் பஸ்கள் மிகவும் பிரபலமாகும். இன்றளவும் அவை சிறப்பாக இயங்கி வருகின்றன. அங்கிருந்து இந்தியாவில் முதலில் கொல்கத்தாவுக்கும், பிறகு மும்பை, டெல்லி, சென்னைக்கும் இத்தகைய பஸ்கள் அறிமுகமாகின. பெங்களூரிலும் பின்னர் டபுள் டெக்கர் பஸ்கள் ஓடத் தொடங்கின.

தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ள நவீன டபுள் டெக்கர் பஸ்களை சென்னை மாநகரின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குளுகுளு வசதியுடன் கூடிய பஸ்களாக இவை இருப்பதால் பயணமும் சுகமாக இருக்கும். அலுப்பும் தெரியாது.  இந்த மாத இறுதிக்குள் எந்தெந்த ரூட்களில் இந்த பஸ் இயக்கப்படும் என்பது முடிவாகி விடுமாம். பிறகு பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

news

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!

news

சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!

news

"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!

news

சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!

news

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!

news

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்

அதிகம் பார்க்கும் செய்திகள்