சென்னை: ஸ்டாப்பிங்கில் பஸ் நிற்காமப் போயிருச்சு.. பலரும் சொல்லும் ஒரு பொதுவான புகார் இது. தமிழ்நாடு முழுவதும் இந்தக் குழப்பம் இன்று வரை தொடர் கதையாக உள்ளது. இதுபோன்ற குறைபாடுகளுக்கு உடனுக்குடன் நிவர்த்தி காண சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சமூக வலைதளங்கள் மூலமாக மக்களுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளது.
ஸ்டாப்பிங்கில் பஸ் ஒழுங்காக நிற்பதே கிடையாது.. கூட்டமாக இருந்தால் ஒன்று ஸ்டாப்புக்கு முன்னாடியே நிறுத்தி விடுகிறார்கள், இல்லாவிட்டால் ஸ்டாப்பிங்கைத் தாண்டி போய் நிறுத்துகிறார்கள். பல நேரங்களில் குறித்த நேரத்தில் பஸ் வருவதில்லை. முக்கியமான நேரத்தில் கட் சர்வீஸ் போட்டு விடுகிறார்கள்.. கண்டக்டர் சரியாக சில்லறை தருவதில்லை. கேட்டால் திட்டுகிறார்கள்... இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகளை மக்கள் அன்றாடம் சந்திக்கிறார்கள்.
ஒவ்வொரு பஸ்ஸிலும் ஏதாவது ஒரு சண்டை இருக்கத்தான் செய்கிறது.. மக்களுக்கு பஸ் சேவைகளால் ஏற்படும் சிரமங்கள், அசவுகரியங்களைச் சரி செய்ய பல்வேறு உதவிகளை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் செய்து வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்கள் மூலம் மக்களின் குறை தீர்க்க இறங்கியுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் ஏற்கனவே பஸ் ஆப் உள்ளது. இந்த நிலையில் புதிதாக சமூக வலைதள உதவிகளையும் அறிவித்துள்ளது. இனிமேல் உங்களுக்கு பஸ் பயணத்தின்போது ஏதாவது குறை ஏற்பட்டால், அதுதொடர்பாக புகார் அளிக்க விரும்பினால் அங்குமிங்கும் அலையத் தேவையில்லை.. இதைச் செய்தால் போதும்.
இலவச கட்டண புகார் எண் - 149
வாட்ஸ் ஆப் மூலம் புகார் கொடுக்க - 9445030516
எக்ஸ் தளத்தில் புகார் கொடுக்க - @MtcChennai
இன்ஸ்டாகிராம் மூலம் புகார் தர - @MtcChennai
பேஸ்புக் பக்கம் - @Mtcchnn
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}