மும்பை: குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற உள்ள முகேஷ் அம்பானி மகன் திருமணத்தையொட்டி ஜாம்நகர் அருகே உள்ள கிராம மக்கள் 51,000 பேருக்கு கல்யாண விருந்து வழங்கியுள்ளது அம்பானி குடும்பம்.
இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்களில் முக்கியமானவர் முகேஷ் அம்பானி. இவரது இரண்டாவது மகன் தான் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இத்திருமண விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

திருமணத்தை முன்னிட்டு மார்ச் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை திருமணத்திற்கான வைபவங்கள் நடைபெற உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் நேற்றில் இருந்தே களை கட்ட தொடங்கியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடைபெற்று வருகின்றது.
இந்தூரில் இருந்து 65 சமையல் கலைஞர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். தினமும் மதியம் 225 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன. இரவு விருந்திற்கு 275 வகையான உணவுகளும், காலை சிற்றுண்டிக்கு 75 வகையான உணவுகளும், நள்ளிரவு விருந்திற்கு 85 வகையான உணவுகளும் சமைத்து பரிமாறப்பட உள்ளது. மகனின் திருமண சாப்பாட்டை ஊரே மெச்சும் அளவிற்கு செய்ய வேண்டும் என்று முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மக்கள் 51,000 பேருக்கு உணவு வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என அம்பானி குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உணவு பரிமாறியுள்ளனர். உணவைத் தொடர்ந்து, கிராமத்தை சேர்ந்த விருந்தினர்களுக்கு பாரம்பரிய நாட்டுப்புற இசையில் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். அம்பானி வீட்டு திருமணம் என்றால் சும்மாவா என்று அந்த ஊர் மக்கள் மெச்சி வருகின்றனர்.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}