களை கட்டிய அம்பானி வீட்டு கல்யாணம்.. 51,000 ஜாம்நகர் கிராம மக்களுக்கு சூப்பரான விருந்து!

Feb 29, 2024,01:54 PM IST

மும்பை: குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெற உள்ள முகேஷ் அம்பானி மகன் திருமணத்தையொட்டி ஜாம்நகர் அருகே உள்ள கிராம மக்கள் 51,000 பேருக்கு கல்யாண விருந்து வழங்கியுள்ளது அம்பானி குடும்பம்.


இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்களில் முக்கியமானவர் முகேஷ் அம்பானி. இவரது இரண்டாவது மகன் தான் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும்  ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இத்திருமண விழாவில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். 




திருமணத்தை முன்னிட்டு மார்ச் 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை திருமணத்திற்கான வைபவங்கள் நடைபெற உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் நேற்றில் இருந்தே களை கட்ட தொடங்கியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடைபெற்று வருகின்றது.


இந்தூரில் இருந்து 65 சமையல் கலைஞர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். தினமும் மதியம் 225 வகையான உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன. இரவு விருந்திற்கு 275 வகையான உணவுகளும், காலை சிற்றுண்டிக்கு 75 வகையான உணவுகளும், நள்ளிரவு விருந்திற்கு 85 வகையான உணவுகளும் சமைத்து பரிமாறப்பட உள்ளது. மகனின் திருமண சாப்பாட்டை ஊரே மெச்சும் அளவிற்கு செய்ய வேண்டும் என்று முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.




திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக  குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மக்கள் 51,000 பேருக்கு உணவு வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என அம்பானி குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உணவு பரிமாறியுள்ளனர். உணவைத் தொடர்ந்து, கிராமத்தை சேர்ந்த விருந்தினர்களுக்கு பாரம்பரிய நாட்டுப்புற இசையில் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். அம்பானி வீட்டு திருமணம் என்றால் சும்மாவா என்று அந்த ஊர் மக்கள் மெச்சி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்