மெக்சிகோ பெண்ணை  "பலமுறை".. வக்கிரம் பிடித்த "டிஜே".. அதிர்ந்து போன மும்பை!

Dec 02, 2023,05:58 PM IST
- மஞ்சுளா தேவி

மும்பை: தான் பணியாற்றி வரும் நிறுவனத்தின் மேலாளர் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியதாக மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

31 வயதான அந்தப் பெண், மும்பையில் வசித்து வருகிறார். இவர் குற்றம் சாட்டப்பட்ட நபரின் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த நபர் டிஜேவாக உள்ளார். அவருக்கு வயது 35. இந்த நிலையில் அந்த மேலாளர் தன்னை கடந்த 2019ம் ஆண்டு முதல் பலமுறை கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக பந்த்ரா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து மும்பை போலீசார் மேலாளர் மீது பாலியல் பலாத்காரம், இயற்கைக்கு மாறான முறையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணைக்குப் பின்னர் அந்த நபரைக் கைது செய்தனர்.



விசாரணையின்போது, அந்த நபர், ஏற்கனவே பல பெண்களை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபத்தியதாக தெரிய வந்தது. முன்னதாக மெக்சிகோ நாட்டுப் பெண் கூறிய புகாரில், நான் தற்போது மும்பையில் வசித்து வருகிறேன். 2017 ஆம் ஆண்டு சமூக ஊடகங்கள் மூலமாக அவரை சந்தித்தேன். தனது பந்த்ரா வீட்டில் வைத்து பல சந்தர்ப்பங்களில் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.

நான் மறுத்ததால் வேலையை விட்டு நிறுத்தி விடுவேன் என கட்டாயப்படுத்தினார். என்னை மிரட்டி நெருக்கமான புகைப்படங்களை எடுத்தார். 2020 ஆம் ஆண்டு அவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகும் , எனக்கு ஆபாசமான படங்களையும், தகாத செய்திகளையும் அனுப்பினார் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்