சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதால் கடுப்பாகியுள்ள அந்த அணியின் ரசிகர்கள், அணியின் ஜெர்சி, தொப்பியை எரித்து ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியை, சமூக வலைதளங்களில் அன்பாலோ செய்து வருகின்றனர். இதனால் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள் கொண்ட அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸிடம் இழந்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.

2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என்று அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக ரோஹித் சர்மாவின் ரசிகர்களால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக இருந்து ரோஹித் சர்மா 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர். கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மா மாற்றப்பட்டதற்கு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ் குறைந்துள்ளனர். இதனால், தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ் கொண்ட அணியாக எம்எஸ் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்திற்கு வந்து விட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை நீக்கி புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்ததன் விளைவாக, அணியின் தொப்பிகள் மற்றும் ஜெர்சிகளை எரித்து ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சமூக வலைதளங்களில் அந்த அணியை அன் பாலோ செய்து வருவதால் கிரிக்கெட் உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் ஆனந்த் முன்னிலையில்.. தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.சி. சம்பத்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026: இந்திய அணியில் சூர்யவன்ஷி.. ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.. திருக்குறள் கதைகள்
Classical Tamil: செம்மொழியாகிய தமிழ் மொழியே!
Tamil Poem: மன(தின்)வலி
Tamil Short Story: மக்களின் மனம்!
வீரம் வெளஞ்ச மண்ணு!
ஜூன் ஆறு வந்தது சிறப்பு நாளே !
Tamil Poem: பூவே பொன்பூவே
{{comments.comment}}