சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதால் கடுப்பாகியுள்ள அந்த அணியின் ரசிகர்கள், அணியின் ஜெர்சி, தொப்பியை எரித்து ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியை, சமூக வலைதளங்களில் அன்பாலோ செய்து வருகின்றனர். இதனால் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள் கொண்ட அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸிடம் இழந்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா செயல்படுவார் என்று அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக ரோஹித் சர்மாவின் ரசிகர்களால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக இருந்து ரோஹித் சர்மா 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்தவர். கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மா மாற்றப்பட்டதற்கு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ் குறைந்துள்ளனர். இதனால், தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக பாலோவர்ஸ் கொண்ட அணியாக எம்எஸ் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்திற்கு வந்து விட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை நீக்கி புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்ததன் விளைவாக, அணியின் தொப்பிகள் மற்றும் ஜெர்சிகளை எரித்து ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சமூக வலைதளங்களில் அந்த அணியை அன் பாலோ செய்து வருவதால் கிரிக்கெட் உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}