- கவிஞர் க.முருகேஸ்வரி
சாய்ந்த நிலையில் இருக்கும்
பைசா கோபுரமும்
சீனா நாட்டின்
தடுப்புச் சுவரும்
சிதிலமடைந்த நிலையில்
பிரம்மாண்ட கொலோசியமும்
காதலின் சின்னம்
தாஜ்மஹாலும்
சிச்சென் இட்சா மச்சு பிச்சு
மீட்பர் சிலை பிரமிடு பெட்ரா என பெயர் புரியாத அதிசயங்களும்...

நான் எப்போதும் வியந்து பார்க்கும் அலைகடலுக்கும்..
கால் நனைக்க கரைக்கு வரும்
கடல் அலைக்கும்
மணி சத்தம் கேட்டதும் ஓடி வந்து பார்த்து பார்த்து பிரமிக்கும் யானைக்கும்
பேருந்து பயணத்தில் கண்ணை விட்டு மறையும் வரை
கழுத்து வலிக்க பார்க்கும் மலைக்கும் ...
பாட்டி வடை சுடும் வட்ட நிலாவிற்கும்...
தோகையையே பொத்திக் காத்து குட்டி போட வைப்போம் நாங்க...
அத்தோகை விரித்தாடும் வண்ண மயிலுக்கும்..
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலுக்கும்
வாயைப் பிளந்து அண்ணாந்து பார்க்கும்
இத்துனூண்டு ஏரோபிளேனுக்கும்
தலையில் நச்... நச்.... என்று கொட்டும் அருவிக்கும்
எத்தனை ஏணி வைத்தாலும்
எட்டவே எட்டாது.....
அதிசயங்கள் அசந்து போகும் இவைகள் தான் ....
என் உலகில் எனக்கான அதிசயங்கள்!!!!!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}