சென்னை: இசைப் புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று அதிகாலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இன்று அதிகாலையில், திடீர் அசவுகரியம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானை அப்பல்லோ மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர். மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிகிச்சை அளித்து வந்தது. அவருக்கு பல்வேறு பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதை ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த அறிக்கையில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று காலை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உரிய மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பியிருந்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு கழுத்து வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் மருத்துவப் பரிசோதனை செய்திருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவருக்கு திடீர் அசவுகரியம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
58 வயதான ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்தனர். ஆனால் தற்போது இசைப் புயல் பூரண நலத்துடன் வீடு திரும்பியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}