சென்னை: இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியன் 16 வயது மகள் மீரா தற்கொலை மூலம் மரணமடைந்துள்ளார்.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகளான மீரா, பிளஸ்டூ படித்து வந்தார். 16 வயதேயான இவர் இன்று அதிகாலை தனது அறையில் மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
கடந்த சில காலமாக மீரா மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

தமிழறிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பேரன்தான் விஜய் ஆண்டனி. தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் விஜய் ஆண்டனி, சமீபகாலமாக நடித்து வருகிறார். தனது படங்களுக்கு மட்டும் தானே இசையமைத்துக் கொள்கிறார். அவரது மகளின் இந்த திடீர் முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த ஆண்டுதான் பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை மூலம் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். அந்தத் துயரச் சம்பவமே இன்னும் யாராலும் மறக்க முடியாத நிலையில் மீராவின் மரணச் செய்தி வந்துள்ளது.
தற்கொலை தீர்வல்ல
வாழ்க்கையில் தற்கொலை ஒரு தீர்வே அல்ல.. தற்கொலை மூலம் எதையுமே சாதிக்க முடியாது. உலகின் மிக மிக மோசமான கோழைத்தனம் எது என்றால் அது நிச்சயம் தற்கொலைதான். நமது வாழ்க்கையை முடித்து விட்டால் பிரச்சினைகள் தீர்ந்து போய் விடுமா.. நிச்சயம் இல்லை.
என்ன பிரச்சினையாக இருந்தாலும் மனதில் அதைத் தேக்கி வைத்துக் கொள்ளாதீர்கள். யாரிடமாவது ஷேர் செய்து விடுங்கள்.. வாழ்க்கை அழகானது.. அதை வாழ்ந்து அனுபவிக்கத்தான் நாம் பிறந்திருக்கிறோம். தயவு செய்து தற்கொலை முடிவை நாடாதீர்கள்.. அந்த எண்ணம் வந்தால் யாரிடமாவது சொல்லி விடுங்கள்.. ஷேர் பண்ணுங்க.. தேவைப்பட்டால் கவுன்சிலிங் கூட பண்ணிக்கங்க.. தவறான முடிவுகளை தேடாதீர்கள்.
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!
{{comments.comment}}