திருவனந்தபுரம்: தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவையிலும், மதுரையிலும் இன்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது. இதேபோல கேரளாவிலும், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் இன்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாட்டில் நேற்று பிறை தென்படவில்லை. இதனால் நாளை அதாவது வியாழக்கிழமையன்று ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கோவையில் பெரும்பாலும் சவுதி அரேபியாவில் எப்போது ரம்ஜான் கொண்டாடுவார்களோ அன்றுதான் இங்கும் கொண்டாடுவார்கள். சவூதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாடப்படுவதால் கோவையிலும் இன்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது.
ரம்ஜானையொட்டி சிறப்புத் தொழுகையில் முஸ்லீம்கள் ஈடுபட்டனர். இதேபோல மதுரையிலும் பலர் இன்றே ரம்ஜானைக் கொண்டாடி மகிழ்ந்தனர். கேரளா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களிலும் இன்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது.
திருவனந்தபுரத்தில் நடந்த ரம்ஜான் சிறப்புத் தொழுகையில், அந்தத் தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். முஸ்லீம்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முஸ்லீம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு ரம்ஜானைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}