திருவனந்தபுரம்: தமிழ்நாட்டில் நாளை ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோவையிலும், மதுரையிலும் இன்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது. இதேபோல கேரளாவிலும், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் இன்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாட்டில் நேற்று பிறை தென்படவில்லை. இதனால் நாளை அதாவது வியாழக்கிழமையன்று ரம்ஜான் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கோவையில் பெரும்பாலும் சவுதி அரேபியாவில் எப்போது ரம்ஜான் கொண்டாடுவார்களோ அன்றுதான் இங்கும் கொண்டாடுவார்கள். சவூதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாடப்படுவதால் கோவையிலும் இன்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது.
ரம்ஜானையொட்டி சிறப்புத் தொழுகையில் முஸ்லீம்கள் ஈடுபட்டனர். இதேபோல மதுரையிலும் பலர் இன்றே ரம்ஜானைக் கொண்டாடி மகிழ்ந்தனர். கேரளா, ஜம்மு காஷ்மீர் மாநிலங்களிலும் இன்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது.
திருவனந்தபுரத்தில் நடந்த ரம்ஜான் சிறப்புத் தொழுகையில், அந்தத் தொகுதியில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். முஸ்லீம்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முஸ்லீம்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு ரம்ஜானைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
தங்கம் விலை நேற்று மட்டுமில்லைங்க இன்றும் குறைவு தான்... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ஆடி வெள்ளிக்கிழமையன்று... மங்கள கெளரியாக பாவித்து அம்மனுக்கு விரதம் இருப்போம்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 25, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
{{comments.comment}}