சென்னை: தேர்தல் களத்துக்கே வராதவர் களத்தைப் பற்றி பேசுறதுதான் ரொம்ப நகைச்சுவையா இருக்கு. விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்து போய்டணும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருச்சியில் நாதக ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எஸ்.ஐ.ஆர் என்பது வாக்கு திருத்தம் என்றார்கள் ஒரு கோடி வாக்கை நீக்குவது எப்படி திருத்தமாகும். குறுகிய காலத்திற்குள் விடுப்பட்டவர்கள் யார் யார் என்பதை எப்படி கண்டறிந்து மீண்டும் சேர்க்க முடியும். தற்போதைய காலத்தில் வாக்கை காப்பாற்றுவதே மிகப்பெரிய போராட்டமாக மாறியுள்ளது. அதிகாரத்தின் பொறுப்பற்ற செயலையே இதை காட்டுகிறது.

விஜய் களத்திற்கே இன்னும் வரவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் நிற்கவில்லை. 2024 பாராளுமன்றத் தேர்தலிலும் காணவில்லை. தேர்தல் களத்திற்கே வராதவர், களத்தைப் பற்றிப் பேசுவது மிகப்பெரிய நகைச்சுவை. களத்திற்கே வராதவர் களத்தில் இருப்பவர்களை பற்றி பேசுகிறார். அதனை சிரித்துவிட்டு கடந்து போய்விடவும். திமுக தீயசக்தி என்பது இப்போதுதான் விஜய்க்கு தெரிந்திருக்கிறது.
திமுக தீயசக்தி என்று விஜய் கூறினால், எதனால் அது தீயசக்தி என்பதையும் விளக்க வேண்டும். தம்பி விஜய்க்கு திமுக மட்டும் தான் எதிரி. ஆனால், எனக்கு திமுக, அதிமுக, பா.ஜ.க, காங்கிரஸ் என நான்கு எதிரிகள். பெரியாரை சீமான் திட்டி விட்டார் என கூறி ஓட்டு கேட்க யாருக்காவது தைரியம் இருக்கிறதா ? பெரியார் பெயரை கூறியவர்கள் 250 வாக்குகள் தான் ஈரோட்டில் வாங்கினார்கள். தவெக என்னுடைய தம்பி கட்சி.. அதனால், தட்டிதான் கொடுக்க வேண்டும். தவெகவுடன் கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை.. எங்களுக்குள் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
DMK Election Manifesto: இல்லத்தரசிகளுக்கு ரூ.8,000 கூப்பன்: திமுக தேர்தல் அறிக்கையில் மெகா அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.. திமுக தேர்தல் வாக்குறுதி
C Joseph Vijay... பெரம்பூர், திருச்சி கிழக்கு.. 2 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் போட்டி!
234 தொகுதிகளிலும் தவெக தனி ஆவர்த்தனம்.. வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார் விஜய்!
Thiruvarur Aazhi Ther: திருவாரூர் தேர் – பலர் அறியாத சுவாரஸ்யமான தகவல்கள்!
புனித வாரம் தொடங்கியது.. தமிழ்நாடு முழுவதும் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்
திருவாரூரில் மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் அசைந்து வரும் ஆழித்தேர்!
முதல் தோட்டா.....!
முதல் போட்டியிலேயே... ஹைதராபாத்தைப் புடைத்தெடுத்து.. வெற்றியைத் துடைத்து எடுத்த ஆர்சிபி
{{comments.comment}}