நாகை டூ இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை.. இன்று முதல் தொடக்கம்..!

Feb 22, 2025,07:06 PM IST
நாகை: நாகை இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று தொடங்கியுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த  கப்பலுக்கு செரியாபாணி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் போக்குவரத்து சேவை நாகையில் இருந்து இலங்கைக்கும்,  மறுமார்க்கமாக இலங்கையில் இருந்து நாகைக்கும் இயக்கப்பட்டது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர ஆறு நாட்களும் கப்பல் போக்குவரத்து 
சேவை நடைபெற்றது.

ஆனால்  வடகிழக்கு பருவமழை போன்ற காரணங்களால் கடந்த ஆண்டு முதல்  நாகை டூ இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே நாகை மற்றும் இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து  22ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.




இந்த நிலையில்,  நாகை டூ இலங்கை இடையேயான பயணிகள் போக்குவரத்து சேவை மீண்டும் இன்று  தொடங்கியது. இந்த கப்பல் போக்குவரத்து சேவையை பயன்படுத்த பயணிகள் www.sailsubham.com என்ற இணையதளத்தின்  வாயிலாக பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். இலங்கை செல்ல காலை உணவு, மற்றும் மதிய உணவு உட்பட ஒரு நபருக்கு ரூபாய் 4250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களிலும் இச்சேவை இருக்கும்  சுபம் நிறுவனம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்