நாகை டூ இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை.. இன்று முதல் தொடக்கம்..!

Feb 22, 2025,07:06 PM IST
நாகை: நாகை இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று தொடங்கியுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த  கப்பலுக்கு செரியாபாணி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் போக்குவரத்து சேவை நாகையில் இருந்து இலங்கைக்கும்,  மறுமார்க்கமாக இலங்கையில் இருந்து நாகைக்கும் இயக்கப்பட்டது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர ஆறு நாட்களும் கப்பல் போக்குவரத்து 
சேவை நடைபெற்றது.

ஆனால்  வடகிழக்கு பருவமழை போன்ற காரணங்களால் கடந்த ஆண்டு முதல்  நாகை டூ இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே நாகை மற்றும் இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து  22ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.




இந்த நிலையில்,  நாகை டூ இலங்கை இடையேயான பயணிகள் போக்குவரத்து சேவை மீண்டும் இன்று  தொடங்கியது. இந்த கப்பல் போக்குவரத்து சேவையை பயன்படுத்த பயணிகள் www.sailsubham.com என்ற இணையதளத்தின்  வாயிலாக பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். இலங்கை செல்ல காலை உணவு, மற்றும் மதிய உணவு உட்பட ஒரு நபருக்கு ரூபாய் 4250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களிலும் இச்சேவை இருக்கும்  சுபம் நிறுவனம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்.. விஜய் வழி தனி வழி.. தெளிவா சொல்லிட்டாரு.. 4 முனைப் போட்டிதான்!

news

அரசியல் ஆலோசகர் பிரஷாத் கிஷோர் விலகலுக்கு.. விஜய்யின் அதிரடி அறிவிப்பே காரணமா?

news

கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலியிடங்களை நிரப்ப தடை போடுவது ஏன்? டாக்டர் அன்புமணி

news

தேர்தலுக்குத் தேர்தல்.. படிப்படியாக முன்னேறும் சீமான்.. 2026 தேர்தலில் யாருக்கெல்லாம் ஆப்பு?

news

என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு தன்னைப் பற்றி பேசுகிறார் முதலமைச்சர்: எடப்பாடி பழனிச்சாமி!

news

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. குஷ்பு, கெளதமி.. எந்தெந்த நடிகைகள் போட்டியிட சீட் கிடைக்கும்?

news

முருகனின் 2ம் படை வீடான.. திருச்செந்தூரில் ஜூலை 7 கும்பாபிஷேகம்.. போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

news

பாகிஸ்தானுக்கு பை பை சொல்கிறது மைக்ரோசாப்ட்.. ஊழியர்களைக் குறைத்து வந்த நிலையில் மூடு விழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்