மீண்டும் தள்ளி வைப்பு.. நாகை - இலங்கை இடையே மே 19ம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கும்!

May 16, 2024,06:00 PM IST

நாகப்பட்டனம்: நாகப்பட்டனம்- இலங்கை காங்கேசன்துறை இடையேயான கப்பல் போக்குவரத்து நாளை தொடங்க இருந்த நிலையில், தற்பொழுது கனமழை பெய்து வருவதால் இந்த கப்பல்  போக்குவரத்து மே 19ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நாகப்பட்டனம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த கப்பலில் பயணம் செய்ய பயண கட்டணமாக ரூ.6,500 நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த கட்டணத்துடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து ரூ.7,670 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  இயற்கை சீற்றம் காரணமாக அக்டோபர் 20ம் தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 




இந்த நிலையில் மே 17ம் தேதி முதல் இது மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பலர் டிக்கெட் முன்பதிவும் செய்திருந்தனர். இந்நிலையில், நாளை தொடங்க இருந்த கப்பல் போக்குவரத்து கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்திற்கு தாமதம் ஏற்பட்டதால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடம் தனியார் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.


இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தவிர்க்க முடியாத சில சட்ட ரீதியான அனுமதிகள் காரணமாகவும், தாமதமான கப்பலின் வருகையினாலும் எமது திட்டமிட்ட நாகப்பட்டனம் -காங்கேசன் துறைமுகம் பயணிகள் கப்பல் சேவையினை இயக்க முடியவில்லை. இந்த சேவையினை 19-5-2024 இல் இருந்து இயக்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதுவரை பதிவு செய்த பயணிகள் 19-5-2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் அவர்கள் விரும்பிய தேதிகளில் பயணிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்