நாகை டூ இலங்கை இடையே கப்பல் சேவை.. பிப்ரவரி 22ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்!

Feb 18, 2025,01:44 PM IST

நாகப்பட்டினம்: நாகை டூ இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே வானிலை மாற்றம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கப்பல் சேவை பிப்., 22ம் தேதி மீண்டும் தொடக்கப்பட உள்ளது.


நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து  2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி தொடங்கப்பட்டது. கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். செரியாபாணி என்ற கப்பல் நாகையில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து நாகைக்கும் என ஒரு நாளில் இரண்டு முறை இயங்க திட்டமிடப்பட்டிருந்தது.




வடகிழக்கு பருவமழை போன்ற காரணங்களால் அதே மாதம் 23ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  அதன்பின்னர் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. வாரத்திற்கு 5 நாட்கள் இந்த கப்பல் சேவை செயல்பட்டு வந்தது. அதன்பின்னர் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் தற்காலிகமாக கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.


இந்த நிலையில், நாகை டூ இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் இந்த மாதம் 22ம் தேதி தெடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கப்பல் சேவை வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் கப்பல் இரு மார்க்கத்திலும் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு www.sailsubham.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். 


ஒரு நபர் 10 கிலோ வரை பொருட்களை எடுத்து செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி இலங்கையில் 3 நாள் தங்கி சுற்றி பார்த்து வரும் பேக்கேஜ் திட்டமும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் காலை நேரப் பனிமூட்டம் நீடிக்கும்...சென்னை வானிலை மையம் தகவல்

news

திமுக.,வின் அடுத்த தலைவர் உதயநிதியா?...முதல்வர் பேசியதற்கு என்ன அர்த்தம்?

news

செங்கோட்டையன் செல்லாத நோட்டு... விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார்: செல்லூர் ராஜூ பேட்டி

news

வெற்று வாக்குறுதியளித்து ஊராட்சி செயலாளர்களை வஞ்சிக்கும் திமுக அரசு: நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

விஜய் பேசினால் எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும்...செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு

news

பாமக யாருக்கு? அன்புமணி தரப்பிற்கு அங்கீகாரம் வழங்கி வழக்கு முடித்து வைப்பு

news

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எதிராக திமுக எம்.பி., திருச்சி சிவா உரிமை மீறல் நோட்டீஸ்

news

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மருத்துவமனையில் அனுமதி

news

ஜனநாயகன் படத்திற்கு புதிய சிக்கல்: மறுதணிக்கைக்கு அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்