நாகப்பட்டினம்: நாகை டூ இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே வானிலை மாற்றம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கப்பல் சேவை பிப்., 22ம் தேதி மீண்டும் தொடக்கப்பட உள்ளது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி தொடங்கப்பட்டது. கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். செரியாபாணி என்ற கப்பல் நாகையில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து நாகைக்கும் என ஒரு நாளில் இரண்டு முறை இயங்க திட்டமிடப்பட்டிருந்தது.
வடகிழக்கு பருவமழை போன்ற காரணங்களால் அதே மாதம் 23ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. வாரத்திற்கு 5 நாட்கள் இந்த கப்பல் சேவை செயல்பட்டு வந்தது. அதன்பின்னர் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் தற்காலிகமாக கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், நாகை டூ இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் இந்த மாதம் 22ம் தேதி தெடங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கப்பல் சேவை வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்களும் கப்பல் இரு மார்க்கத்திலும் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு www.sailsubham.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
ஒரு நபர் 10 கிலோ வரை பொருட்களை எடுத்து செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி இலங்கையில் 3 நாள் தங்கி சுற்றி பார்த்து வரும் பேக்கேஜ் திட்டமும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!
தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?
பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!
பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு
டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க
11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்
ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு
{{comments.comment}}