சென்னை: தமிழ்நாடு பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனத்தை பதவியிலிருந்து ஓய்வு பெறும் தலைவர் அண்ணாமலை இன்று நடந்த விழாவில் அறிவித்தார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்து வந்த அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்து விட்டது. இருப்பினும் மீண்டும் அவர் தலைவராக தேர்வாவாரா அல்லது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற பேச்சு இருந்து வந்தது.. இறுதியில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முடிவை பாஜக மேலிடம் எடுத்தது.
அதன்படி நேற்று புதிய தலைவர் பதவிக்கான விருப்ப மனு பெறப்பட்டது. அதில், நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்திருந்தார். இதையடுத்து இன்று வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் புதிய தலைவர் அறிவிப்பு விழா நடைபெற்றது. அதில் பேசிய அண்ணாமலை, புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தார். இதையடுத்து அவருக்கு தலைவர் நியமன சான்றிதழ் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அனைவரையும் மேடையில் குணிந்து கும்பிட்டார் நயினார் நாகேந்திரன்.

புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட நயினார் நாகேந்திரனை, அண்ணாமலை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார்.
திருநெல்வேலி தொகுதி சட்டசபை உறுப்பினரான நயினார் நாகேந்திரன், சட்டசபை பாஜக கட்சித் தலைவராகவும் இருக்கிறார். அதிமுகவில் இருந்தபோது அமைச்சர் பதவியையும் அவர் வகித்துள்ளார். திராவிட அரசியலில் ஊறித் திளைத்தவரான நயினார் நாகேந்திரன் தற்போது தேசியக் கட்சியான பாஜகவின் மாநிலத் தலைவராக செயல்படப் போகிறார்.
இன்றைய விழாவில் முன்னாள் தலைவர்களான பொன் ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், மற்றும் வானதி சீனிவாசன், எச். ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராகியுள்ளார் நயினார் நாகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}