சென்னை: தமிழ்நாட்டில் குற்றங்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 52 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் மதுப்பழக்க வழக்கம்தான். இதில் தமிழக அரசு எந்த கவனமும் செலுத்துவது இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெற்றி பெற்றதற்கு பிரதமருக்கும், ராணுவ வீரர்களுக்கும் நன்றி செலுத்தும் வகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், சென்னை எழும்பூரில் ஆபரேஷன் சிந்தூர் பேரணி நேற்று நடைபெற்றது.இதில்
டாக்டர் தமிழிசை, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, துணை தலைவர்கள் கரு.நாகராஜன், டால்பின் ஸ்ரீதர், நாராயணன் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இன்று திருச்சியில் ஆபரேஷன் சிந்தூருக்கு ஆதரவாக பேரணி நடைபெற உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் அவர் கூறியதாவது,
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து நேற்று சென்னையில் பேரணி வைத்திருந்தோம். அதற்காக பத்தாயிரம் பேர் வந்திருந்தனர். அதனை தொடர்ந்து இன்று திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதோடு மாவட்ட தலைவர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.இதில் எல்லோருமே கலந்து கொள்ள வேண்டும் என நாங்கள் சொல்லி இருக்கிறோம். இதில் கட்சி பாகுபாடு இன்றி பாஜக கொடி எங்கேயும் கட்டப் போவதில்லை. எங்கேயும் பிரதமரின் படத்தை தவிர வேறு யாருடைய படமும் இருக்காது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். அனைவரும் அமைதியான முறையில் தேசியக் கொடியேந்தி ஒழுக்க கட்டுப்பாட்டுடன் வர வேண்டும் என நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம்
பொள்ளாச்சி தீர்ப்பை பொருத்தவரைக்கும் பெண்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது. நல்ல தீர்ப்பு வந்திருக்கிறது. இன்று பத்திரிக்கையை பார்த்தால் கொலை கொள்ளை வழக்கு, மதுப்பழக்க வழக்கம், பாலியல் வன்கொடுமைகள் தினசரி நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் குற்றங்கள் கடந்த ஆண்டை விட 52% எல்லா குற்றங்களும் அதிகரித்துள்ளது.
இதற்கு அடிப்படை காரணம் மதுப்பழக்க வழக்கம்தான். தமிழக அரசாங்கம் எந்த கவனத்தையும் செலுத்துவதில்லை. தமிழக அரசாங்கம் முழுக்க முழுக்க இதற்கு காரணமாக இருக்கிறது.எங்களைப் பொறுத்தவரை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}