டெல்லி: டெல்லி ராஷ்டிரபதி பவனில், இரவு 7:15 மணிக்கு பிரதமர் நரேந்திர மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அண்டை நாட்டுத் தலைவர்கள் உட்பட 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தலில் பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நாளை மோடி தலைமையில் பதவியேற்கவுள்ளது. நேற்று மோடி, நாடாளுமன்ற குழுத் .தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சிமயைக்க உரிமை கோரினார். அவரும் பதவியேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதையடுத்து மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி மற்றும் புதிய அமைச்சரவை நாளை பதவி ஏற்கவுள்ளனர். பதவியேற்பு விழா நாளை இரவு 7:15 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது . இதற்காக அண்டை நாட்டு தலைவர்கள் உட்பட 8000 பேர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை பிரதமர், நேபாள நாட்டு பிரதமர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்கவுள்ளனர். அதேபோல மாலத்தீவு அதிபரும் விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பிரதமருடன் பதவியேற்கவுள்ள அமைச்சர்கள் பட்டியல் இன்று இரவுக்குள் முடிவாகி விடும் என்று தெரிகிறது. இதுதொடர்பான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
புதிய அரசு பதவியேற்றவுடன், நாடாளுமன்றத்தில் புதிய எம்.பிக்கள் பதவி ஏற்பார்கள். தற்காலிக சபாநாயகர் பதவியேற்பை நடத்தி வைப்பார். அதன் பின்னர் லோக்சபா சபாநாயகர் தேர்தல் நடைபெறும். அதன் பின்னர் கூடும் முதல் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்துவார்.
 
                                                                            கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!
 
                                                                            ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!
 
                                                                            தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
 
                                                                            பீகாரில் பிரதமர் மோடி பொய் பிரச்சாரம் செய்து வாக்குகளை பெற முயற்சிக்கிறார்: ஆர்.எஸ்.பாரதி
 
                                                                            பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!
 
                                                                            தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி
 
                                                                            SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?
 
                                                                            குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை
 
                                                                            ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!
{{comments.comment}}