டெல்லி: தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
குடியரசுத் துணைத் தலைவரும் ராஜ்யசபா தலைவருமான ஜெகதீப் தங்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹர்வன்ஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஜெகதீப் தங்கர் பேசுகையில், இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணம். மாபெரும் மாற்றத்தை நாடு சந்தித்து வருகிறது. நமது சக்தி, திறமை, பங்களிப்பை உலகம் அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளது. நாம் நமது காலத்தில் வாழ ஆரம்பித்துள்ளோம். நாம் கனவு கண்ட சாதனைகள், வளர்ச்சியை இந்தக் காலத்தில் நாம் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம் என்றார் ஜெகதீப் தங்கர்.
காங்கிரஸ் பங்கேற்கவில்லை
தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்கவில்லை. விழாவுக்கு மிகவும் தாமதமாக தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கிடையே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நாளை தொடங்குகிறது. நாடாளுமன்றத்தின் 75 வருட வரலாறு தொடர்பாக விவாதிக்கவும், பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் இந்த சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற வளாகத்தில் கூடும் இக்கூட்டம் நிறைவு நாளில் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}