புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது

Sep 17, 2023,11:47 AM IST

டெல்லி: தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.


குடியரசுத் துணைத் தலைவரும் ராஜ்யசபா தலைவருமான ஜெகதீப் தங்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹர்வன்ஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




நிகழ்ச்சியில் ஜெகதீப் தங்கர் பேசுகையில், இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணம். மாபெரும் மாற்றத்தை நாடு சந்தித்து வருகிறது. நமது சக்தி, திறமை, பங்களிப்பை உலகம் அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளது. நாம் நமது காலத்தில் வாழ ஆரம்பித்துள்ளோம். நாம் கனவு கண்ட சாதனைகள், வளர்ச்சியை இந்தக் காலத்தில் நாம் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம் என்றார் ஜெகதீப் தங்கர்.


காங்கிரஸ் பங்கேற்கவில்லை


தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்கவில்லை.  விழாவுக்கு மிகவும் தாமதமாக தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.


இதற்கிடையே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நாளை தொடங்குகிறது. நாடாளுமன்றத்தின் 75 வருட வரலாறு தொடர்பாக விவாதிக்கவும், பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் இந்த சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற வளாகத்தில் கூடும் இக்கூட்டம் நிறைவு நாளில் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்