புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது

Sep 17, 2023,11:47 AM IST

டெல்லி: தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.


குடியரசுத் துணைத் தலைவரும் ராஜ்யசபா தலைவருமான ஜெகதீப் தங்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹர்வன்ஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




நிகழ்ச்சியில் ஜெகதீப் தங்கர் பேசுகையில், இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தருணம். மாபெரும் மாற்றத்தை நாடு சந்தித்து வருகிறது. நமது சக்தி, திறமை, பங்களிப்பை உலகம் அங்கீகரிக்க ஆரம்பித்துள்ளது. நாம் நமது காலத்தில் வாழ ஆரம்பித்துள்ளோம். நாம் கனவு கண்ட சாதனைகள், வளர்ச்சியை இந்தக் காலத்தில் நாம் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம் என்றார் ஜெகதீப் தங்கர்.


காங்கிரஸ் பங்கேற்கவில்லை


தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்கவில்லை.  விழாவுக்கு மிகவும் தாமதமாக தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.


இதற்கிடையே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நாளை தொடங்குகிறது. நாடாளுமன்றத்தின் 75 வருட வரலாறு தொடர்பாக விவாதிக்கவும், பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் இந்த சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற வளாகத்தில் கூடும் இக்கூட்டம் நிறைவு நாளில் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்