நேஷனல் ஹெரால்டு வழக்கில்.. சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு.. டெல்லி கோர்ட் நோட்டீஸ்

May 02, 2025,06:10 PM IST

டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ED தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரித்த சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, அவர்கள் தரப்பு வாதத்தை கேட்க உரிமை இருப்பதாக கூறினார். எந்த நிலையிலும் கருத்து கேட்கும் உரிமை என்பது நியாயமான விசாரணைக்கு உயிர் போன்றது என்று நீதிபதி குறிப்பிட்டார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை மே 8-ம் தேதி நடைபெறும். 


பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி 2014 ஜூன் 26-ல் அளித்த புகாரின் அடிப்படையில், 2021-ல் அமலாக்கத்துறை இந்த வழக்கை தொடங்கியது. சோனியா காந்தி உட்பட காங்கிரஸ் தலைவர்கள் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரூ.2,000 கோடி மதிப்பிலான Associated Journals Limited (AJL) சொத்துக்களை Young Indian என்ற நிறுவனம் மோசடியாக கையகப்படுத்தியதாக குற்றச்சாட்டு. இதைத்தான் அமலாக்கத்துறை விசாரிக்கிறது. 




குற்றப்பத்திரிகையில் சோனியா காந்தி முதல் குற்றவாளியாகவும், ராகுல் காந்தி இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குற்றப்பத்திரிகை, Young Indian மற்றும் AJL நிறுவனங்களின் பங்கு விவரங்கள், பண பரிவர்த்தனைகள் மற்றும் முக்கிய நபர்களின் பங்கு பற்றி அமலாக்கத்துறை நடத்தும் விசாரணையின் ஒரு பகுதியாகும்.


Young Indian நிறுவனத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் பெரும்பான்மை பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிறுவனம், AJL சொத்துக்களை வெறும் ரூ.50 லட்சத்துக்கு வாங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா மற்றும் சுமன் துபே ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், மறைந்த காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. 


அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை  குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ், இது பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்துக் கூறுகையில், நேஷனல் ஹெரால்டு சொத்துக்களை பறிமுதல் செய்வது சட்டத்தின் ஆட்சி போல் காட்டப்படும் அரசு ஆதரவு குற்றச் செயலாகும் என்று கூறியுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்