நவராத்திரி விழா.. கர்பா டான்ஸ் ஆடிய 17 வயது சிறுவனுக்கு மாரடைப்பு..!

Oct 22, 2023,01:37 PM IST

அகமதாபாத்: குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் நடந்த நவராத்திரி விழா கர்பா நடன நிகழ்ச்சியின்போது 17 வயது சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நவராத்திரி விழா வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும். குறிப்பாக குஜராத்தில் தாண்டியா நடனம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதேபோல கர்பா நடனமும் அங்கு புகழ் பெற்றதாகும். ஆனால் இந்த ஆண்டு கர்பா நிகழ்ச்சியின்போது பலர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்து வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.


குஜராத் மாநிலம் கேடா மாவட்டம், கபடாவஞ்ச் என்ற பகுதியில் கர்பா நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பலரும் கலந்து கொண்டனர்.  அப்போது வீர் ஷா என்ற 17 வயது சிறுவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து விட்டான். உடனடியாக அவனை அங்கிருந்த தன்னார்லவர்கள் ,முதலுதவி கொடுத்தனர். சிபிஆர் கொடுத்துப் பார்த்தனர். ஆனாலும், சிறுவன் மூச்சுப் பேச்சு இல்லாமல் இருந்தான். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு  அவனைப் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வீர் ஷா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.




17 வயதில் எப்படி மாரடைப்பு வந்தது என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.  இந்த சம்பவம் நடந்தபோது வீர் ஷாவின் பெற்றோரான ரிபல் ஷா மற்றும் அவரது மனைவி ஆகியோர் அதே பகுதியில் வேறு ஒரு இடத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு சென்று வீர் ஷா மரணம் உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அவர்களுக்கு விஷயம் தெரிந்து அலறி அடித்து மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.


இந்த சம்பவம் குறித்து ரிபல் ஷா கூறுகையில், கர்பாவில் ஈடுபடுவோர் மிகவும் கவனமாக இருங்கள். அதீதமாக உணர்ச்சிவசப்படாதீர்கள். தொடர்ந்து விளையாடாதீர்கள். ஓய்வெடுங்கள். எனது பிள்ளையை நான் இழந்து விட்டேன். இது யாருக்கும் நடக்கக் கூடாது என்றார் அவர்.


குஜராத்தில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கர்பா நடன நிகழ்ச்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். அதுவும் ஒரே நாளில் இது நடந்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இடை விடாமல் கர்பாவில் கலந்து கொண்டு ஆடுவதால்தான் இப்படி நடப்பதாக டாக்டர்கள்  கூறுகின்றனர். பல மணி நேரம் தொடர்ந்து கர்பா நடனம் ஆடுவது நமது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.


ஆனால் நவராத்திரி விழாவின்போது தொடர்ச்சியாக கர்பா நடனங்கள் நடைபெற்றபடி இருக்கும். அதில் பலரும் கலந்து கொண்டு உற்சாக மிகுதியால் இடைவிடாமல் ஆடிக் களிக்கிறார்கள். அதனால்தான் இதுபோன்ற விபரீதங்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளில் போய் முடிவதாக கூறப்படுகிறது.


சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்