சிறையில் வாடும் சித்து.. புற்றுநோயுடன் தவிக்கும் மனைவி.. உருக்கமான கடிதம்!

Mar 24, 2023,04:47 PM IST
சண்டிகர்: முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவிக்கு புற்றுநோய்  வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சித்து தற்போது கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1988ம் ஆண்டு குர்நாம் சிங் என்பவருடன் நடந்த மோதலில் அவரை அடித்துக் கொன்று விட்டார் சித்து. அந்தக் கொலை வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம், சுப்ரீம் கோர்ட், சித்துவுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.



இந்த நிலையில் சித்துவின் மனைவி நவ்ஜோத் கெளருக்கு புற்றுநோய் வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சித்துவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் நவ்ஜோத் கெளர்.  அவருக்கு 2வது நிலை புற்றுநோய் என்று தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில் செய்யாத குற்றத்துக்காக அவர் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். அதுதொடர்பான அனைவரையும் மன்னித்து விடுங்கள்.  ஒவ்வொரு நாளும் உங்களுக்காக காத்திருக்கும் வேதனையை விட பெரியது எதுவும் இல்லை. உங்களது வலியை எடுத்துக் கொண்டு அன்பைப் பகிர ஆசையாக உள்ளேன். புற்றுநோய் வந்துள்ளது. மோசமானதுதான். ஆனால் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு விட்டது. 

உங்களுக்கான நீதி மீண்டும் மீண்டும் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உண்மை மிகவும் சக்தி வாய்ந்தது. அது உங்களை சோதனையிலிருந்து மீட்கும்.  எனக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளது. யாரையும் குறை சொல்லமுடியாது. இது கடவுளின் திட்டம் என்று கூறியுள்ளார் நவ்ஜோத் கெளர் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்