சிறையில் வாடும் சித்து.. புற்றுநோயுடன் தவிக்கும் மனைவி.. உருக்கமான கடிதம்!

Mar 24, 2023,04:47 PM IST
சண்டிகர்: முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவிக்கு புற்றுநோய்  வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சித்து தற்போது கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1988ம் ஆண்டு குர்நாம் சிங் என்பவருடன் நடந்த மோதலில் அவரை அடித்துக் கொன்று விட்டார் சித்து. அந்தக் கொலை வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம், சுப்ரீம் கோர்ட், சித்துவுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.



இந்த நிலையில் சித்துவின் மனைவி நவ்ஜோத் கெளருக்கு புற்றுநோய் வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சித்துவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் நவ்ஜோத் கெளர்.  அவருக்கு 2வது நிலை புற்றுநோய் என்று தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில் செய்யாத குற்றத்துக்காக அவர் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். அதுதொடர்பான அனைவரையும் மன்னித்து விடுங்கள்.  ஒவ்வொரு நாளும் உங்களுக்காக காத்திருக்கும் வேதனையை விட பெரியது எதுவும் இல்லை. உங்களது வலியை எடுத்துக் கொண்டு அன்பைப் பகிர ஆசையாக உள்ளேன். புற்றுநோய் வந்துள்ளது. மோசமானதுதான். ஆனால் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு விட்டது. 

உங்களுக்கான நீதி மீண்டும் மீண்டும் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உண்மை மிகவும் சக்தி வாய்ந்தது. அது உங்களை சோதனையிலிருந்து மீட்கும்.  எனக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளது. யாரையும் குறை சொல்லமுடியாது. இது கடவுளின் திட்டம் என்று கூறியுள்ளார் நவ்ஜோத் கெளர் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி

news

கடலும் கடலின் ஒரு துளியும்!

news

இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்