சிறையில் வாடும் சித்து.. புற்றுநோயுடன் தவிக்கும் மனைவி.. உருக்கமான கடிதம்!

Mar 24, 2023,04:47 PM IST
சண்டிகர்: முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவிக்கு புற்றுநோய்  வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சித்து தற்போது கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1988ம் ஆண்டு குர்நாம் சிங் என்பவருடன் நடந்த மோதலில் அவரை அடித்துக் கொன்று விட்டார் சித்து. அந்தக் கொலை வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம், சுப்ரீம் கோர்ட், சித்துவுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.



இந்த நிலையில் சித்துவின் மனைவி நவ்ஜோத் கெளருக்கு புற்றுநோய் வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சித்துவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் நவ்ஜோத் கெளர்.  அவருக்கு 2வது நிலை புற்றுநோய் என்று தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில் செய்யாத குற்றத்துக்காக அவர் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். அதுதொடர்பான அனைவரையும் மன்னித்து விடுங்கள்.  ஒவ்வொரு நாளும் உங்களுக்காக காத்திருக்கும் வேதனையை விட பெரியது எதுவும் இல்லை. உங்களது வலியை எடுத்துக் கொண்டு அன்பைப் பகிர ஆசையாக உள்ளேன். புற்றுநோய் வந்துள்ளது. மோசமானதுதான். ஆனால் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு விட்டது. 

உங்களுக்கான நீதி மீண்டும் மீண்டும் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உண்மை மிகவும் சக்தி வாய்ந்தது. அது உங்களை சோதனையிலிருந்து மீட்கும்.  எனக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளது. யாரையும் குறை சொல்லமுடியாது. இது கடவுளின் திட்டம் என்று கூறியுள்ளார் நவ்ஜோத் கெளர் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

news

பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!

news

பாமக ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு: அன்புமணி அறிவிப்பு!

news

ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக முதலில் தனது முதுகை திரும்பி பார்க்க வேண்டும் : அமைச்சர் சேகர்பாபு

news

டிமார்ட் நிறுவனத்தின் பெயரில் போலி வெப்சைட் மோசடி.. மக்களே உஷாரா இருங்க

news

11 ஆண்டு பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதம்.. பிரதமர் மோடி பெருமிதம்

news

ராஜ்யசபா தேர்தல்: எம்பி., ஆகிறார் கமல்ஹாசன்...அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்