சிறையில் வாடும் சித்து.. புற்றுநோயுடன் தவிக்கும் மனைவி.. உருக்கமான கடிதம்!

Mar 24, 2023,04:47 PM IST
சண்டிகர்: முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவிக்கு புற்றுநோய்  வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சித்து தற்போது கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1988ம் ஆண்டு குர்நாம் சிங் என்பவருடன் நடந்த மோதலில் அவரை அடித்துக் கொன்று விட்டார் சித்து. அந்தக் கொலை வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம், சுப்ரீம் கோர்ட், சித்துவுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.



இந்த நிலையில் சித்துவின் மனைவி நவ்ஜோத் கெளருக்கு புற்றுநோய் வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சித்துவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் நவ்ஜோத் கெளர்.  அவருக்கு 2வது நிலை புற்றுநோய் என்று தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில் செய்யாத குற்றத்துக்காக அவர் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார். அதுதொடர்பான அனைவரையும் மன்னித்து விடுங்கள்.  ஒவ்வொரு நாளும் உங்களுக்காக காத்திருக்கும் வேதனையை விட பெரியது எதுவும் இல்லை. உங்களது வலியை எடுத்துக் கொண்டு அன்பைப் பகிர ஆசையாக உள்ளேன். புற்றுநோய் வந்துள்ளது. மோசமானதுதான். ஆனால் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு விட்டது. 

உங்களுக்கான நீதி மீண்டும் மீண்டும் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உண்மை மிகவும் சக்தி வாய்ந்தது. அது உங்களை சோதனையிலிருந்து மீட்கும்.  எனக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளது. யாரையும் குறை சொல்லமுடியாது. இது கடவுளின் திட்டம் என்று கூறியுள்ளார் நவ்ஜோத் கெளர் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்

news

2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க

news

விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

news

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

news

அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

news

ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?

news

தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

news

12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்