நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மிக முக்கியமானதாகும். இருந்தாலும் சில குறிப்பிட்ட நாட்களும், திதியும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்படி நவராத்திரியின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று தான் இன்றைய மூன்றாம் நாள் வழிபாடு. நவராத்தியின் முதல் மூன்று நாட்களும் துர்கையை வழிபடுவதற்கான நாட்களாகும். துர்கை அம்மன் தான் தைரியம், தெளிவு, ஆற்றல், வெற்றி ஆகியவற்றை தரும் தேவியாக கருதப்படுகிறாள். இவளை வழிபட்டால் பயம் நீங்கி, தைரியம் பிறக்கும். தடைகள் விலகி, மங்களங்கள் கூடி வரும். அப்படிப்பட்ட துர்கை வழிபாட்டின் நிறைவு நாள் தான் நவராத்திரியின் மூன்றாம் நாள்.
நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையை மகேஸ்வரியாகவும், இரண்டாவது நாளில் ராஜராஜேஸ்வரியாகவும் வழிபட்டதை தொடர்ந்து மூன்றாவது நாளில் அம்பிகையின் எந்த வடிவத்தை, என்ன மலர் மற்றும் நைவேத்தியம் படைத்து, எப்படி வழிபட வேண்டும், என்ன மந்திரம் சொல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நவராத்திரி 3ம் நாள் வழிபாடு :

அம்பாளின் பெயர் - வாராஹி
கோலம் - மலர் வகை கோலம்
மலர் - சம்பங்கி
இலை - துளசி
நைவேத்தியம் - சர்க்கரை பொங்கல்
தானியம் - காராமணி சுண்டல்
பழம் - பலாப்பழம்
ராகம் - காம்போதி
நிறம் - நீலம்
நவராத்திரியின் மூன்றாவது நாளுக்குரிய தேவியாக, அம்பிகையின் போர்ப்படை தளபதியாகவும், சப்தகன்னியர்களில் ஒருவராகவும் கருதப்படும் வாராஹியே விளங்குகிறாள். இவளை வழிபடுவதால் பகை, வழக்கு, கடன், தடைகள், துன்பங்கள் ஆகியவை நீங்கும். அம்பிகைக்கு போரில் வெற்றியை பெற்றுத் தந்த வாராஹியை வழிபட்டால் நம்முடைய வாழ்விலும் வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கை. நவராத்திரியின் மூன்றாவது நாளில் வாராஹியை போற்றும் ஸ்ரீ வாராஹி மாலை மந்திரத்தை பாராயணம் செய்து வழிபடலாம். வாராஹியின் 108 மந்திரங்களை சொல்லி அர்ச்சனை செய்தும் வழிபடலாம்.
சொல்ல வேண்டிய மந்திரங்கள் :
1)ஒம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
ஸ்வ்ப்பண்ம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.
2)ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
3)ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
4) செல்வம் பெருக
ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வாராஹி தேவியை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
மூல மந்திரம் :
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம் பாதுகாப்பாம். ஸ்வாஹா
காயத்ரி மந்திரம்:
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
5. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் க்லீம் வாராகியே நமஹ
தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்
ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு
அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.. உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தேர்தல் நெருங்கும்போதுதான் எங்களது முடிவு.. அதுவரை சஸ்பென்ஸ்.. பிரேமலதா விஜயகாந்த்
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. வேகமாக முன்னேறும் தேஜகூ.. போராடும் ஆர்ஜேடி.. தடுமாறும் காங்.!
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் 2025.. டெபாசிட்டை இழக்கும் எதிர்க்கட்சிகள்!
{{comments.comment}}