நவராத்திரியின் 6ம் நாள், மகாலட்சுமி வழிபாட்டின் நிறைவு நாளாகும். இது மகாலட்சுமியிடம் வேண்டிய வரங்களை பெறுவதற்குரிய சிறப்பான நாளாகும். அதோடு இந்த ஆண்டு நவராத்திரி காலத்தில் மகாலட்சுமியை வழிபடும் நாள், புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபடுவதற்கு சிறப்புமிக்க புரட்டாசி சனிக்கிழமையுடன் இணைந்து வருவது இன்னும் சிறப்புக்குரியதாகும். நவராத்திரியின் 6ம் நாளில் அம்பிகையை எந்த வடிவத்தில், எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நவராத்திரி 6ம் நாள் வழிபாடு :

அம்மனின் வடிவம் - சண்டிகா தேவி
கோலம் - கடலை மாவால் தேவியின் நாமத்தை கோலமிட வேண்டும்
மலர் - செம்பருத்தி
இலை - சந்தன இலை
நைவேத்தியம் - தேங்காய் சாதம்
சுண்டல் - பச்சை பயிறு சுண்டல்
பழம் - நார்த்தம்/ ஆரஞ்சு
ராகம் - நீலாம்பரி
நிறம் - கிளிப் பச்சை
சொல்ல வேண்டிய மந்திரம் :
நவராத்திரியின் 6ம் நாள் மந்திரம் :
மூல மந்திரம் :
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸர்வ பூஜ்ய தேவி மங்கள சண்டிகே ஹும், ஹும், பட் ஸ்வாஹா
காயத்ரி மந்திரம் :
"ஓம் சண்டிகாயை வித்மகே
துர்காயை தீமஹி
தந்நோ தேவி ப்ரசோதயாத்
நவராத்திரியின் 6ம் நாளுக்குரிய தேவியான சாமுண்டி தேவி உக்கிர வடிவமாக கருதப்படுபவள். இவள் காளியின் மறு வடிவமாக கருதப்படுபவள் ஆவாள். இவள் குழந்தை மனம் படைத்தவள் என்றாலும், தன்னுடைய பக்தர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால் அவர்களை காப்பதற்காக கோபப்படக் கூடியவள்.
நவராத்திரியின் 6 ம் நாளில் 7 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளை அழைத்து கன்னிகா பூஜை நடத்துவது மிகவும் விசேஷமானதாகும்.
ஆவின் மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கான ரூ.2 தள்ளுபடி ரத்து!
ஆனி மாதம் வரும்.. ஜேஷ்ட பெளர்ணமி திதி.. நாளை காலை 6.11 வரை இருக்கு!
விழுப்புரத்தில் நடந்த திருக்குறள் திருவிழா.. சென்னை ஆசிரியை கோ.லதாவுக்கு விருது
அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்எல்ஏ.,க்கள்...காலியான 7 தொகுதிகள்
அதிமுகவிற்கு மீண்டும் அதிர்ச்சி... எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ராஜினாமா.. காலியிடம் 7 ஆனது
அரசு வேலை மோசடி : திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு குற்றப்பிரிவு போலீசார் சம்மன்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவல பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்? கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டம்!
"சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை" – நற்பணி இயக்கம் விளக்கம்!
{{comments.comment}}