நவராத்திரியின் 6ம் நாள், மகாலட்சுமி வழிபாட்டின் நிறைவு நாளாகும். இது மகாலட்சுமியிடம் வேண்டிய வரங்களை பெறுவதற்குரிய சிறப்பான நாளாகும். அதோடு இந்த ஆண்டு நவராத்திரி காலத்தில் மகாலட்சுமியை வழிபடும் நாள், புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபடுவதற்கு சிறப்புமிக்க புரட்டாசி சனிக்கிழமையுடன் இணைந்து வருவது இன்னும் சிறப்புக்குரியதாகும். நவராத்திரியின் 6ம் நாளில் அம்பிகையை எந்த வடிவத்தில், எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நவராத்திரி 6ம் நாள் வழிபாடு :

அம்மனின் வடிவம் - சண்டிகா தேவி
கோலம் - கடலை மாவால் தேவியின் நாமத்தை கோலமிட வேண்டும்
மலர் - செம்பருத்தி
இலை - சந்தன இலை
நைவேத்தியம் - தேங்காய் சாதம்
சுண்டல் - பச்சை பயிறு சுண்டல்
பழம் - நார்த்தம்/ ஆரஞ்சு
ராகம் - நீலாம்பரி
நிறம் - கிளிப் பச்சை
சொல்ல வேண்டிய மந்திரம் :
நவராத்திரியின் 6ம் நாள் மந்திரம் :
மூல மந்திரம் :
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸர்வ பூஜ்ய தேவி மங்கள சண்டிகே ஹும், ஹும், பட் ஸ்வாஹா
காயத்ரி மந்திரம் :
"ஓம் சண்டிகாயை வித்மகே
துர்காயை தீமஹி
தந்நோ தேவி ப்ரசோதயாத்
நவராத்திரியின் 6ம் நாளுக்குரிய தேவியான சாமுண்டி தேவி உக்கிர வடிவமாக கருதப்படுபவள். இவள் காளியின் மறு வடிவமாக கருதப்படுபவள் ஆவாள். இவள் குழந்தை மனம் படைத்தவள் என்றாலும், தன்னுடைய பக்தர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால் அவர்களை காப்பதற்காக கோபப்படக் கூடியவள்.
நவராத்திரியின் 6 ம் நாளில் 7 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளை அழைத்து கன்னிகா பூஜை நடத்துவது மிகவும் விசேஷமானதாகும்.
ஐசிசி மகளிர் டி20 பேட்டிங் தரவரிசையில்.. ஷெபாலி வர்மா அதிரடி உயர்வு.. 6வது இடம்!
2026 குடியரசு தின விழா அணிவகுப்பில்.. தமிழ்நாட்டின் பசுமை மின் சக்தி ஊர்தி பங்கேற்பு
கவிதாயினியின் இரவுகள்!
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!
எப்பப் பார்த்தாலும் உப்புமாதானா.. அப்படின்னு கேட்பவர்களுக்காக.. ஸ்பெஷல் கோதுமை ரவா பொங்கல்!
மகர விளக்கு பூஜைக்காக.. சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு
Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?
நான் பாடும் மெளன ராகம்... A song that never ends!
{{comments.comment}}