இன்று நவராத்திரி 9ம் நாள்...அம்பிகையை வழிபடும் முறை, மலர், பிரசாதம் விபரம்

Sep 30, 2025,12:00 PM IST

நவராத்திரியின் ஒன்பதாவது நாள் என்பது வழக்கமாக நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளாக இருக்கும். இது ஞானத்தை வழங்கும் கலைமகளான சரஸ்வதி தேவியை வழிபடுவதற்குரிய நாளாகும். இந்த ஆண்டு நவராத்திரி மொத்தம் பத்து நாட்கள் விழாவாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதால் இந்த ஆண்டு நவராத்திரியின் ஒன்பதாவது நாள் சரஸ்வதியை வழிபடுவதற்குரிய நாளாக அமைந்துள்ளது. இந்த நாளில் சரஸ்வதியின் அருளை பெறுவதற்கு எப்படி வழிபட வேண்டும், என்ன மலர், நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.




நவராத்திரி 9ம் நாள் வழிபாடு


அம்பிகையின் பெயர் - பரமேஸ்வரி

கோலம் - தாமரை வகை கோலம்

மலர் - தாமரை

இலை -மரிக்கொழுந்து

நைவேத்தியம் - சர்க்கரை பொங்கல்

சுண்டல் - கொண்டைக்கடலை சுண்டல்

பழம் - நாவல் பழம்

ராகம் - வசந்தா

நிறம் - வெந்தயம் நிறம்


சொல்ல வேண்டிய மந்திரம் : 


மூல மந்திரம் :

"சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி 

வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா"


காயத்ரி மந்திரம் :

"ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே 

காமராஜாய தீமஹி 

தன்னோ தேவி பிரச்சோதயாத்"


அதோடு நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி தேவிக்குரிய சகலகலாவல்லி மாலையை குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் படிப்பது சிறப்பானதாகும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!

news

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

news

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

news

மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!

news

லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

news

அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!

news

Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!

news

"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்