இன்று நவராத்திரி 9ம் நாள்...அம்பிகையை வழிபடும் முறை, மலர், பிரசாதம் விபரம்

Sep 30, 2025,12:00 PM IST

நவராத்திரியின் ஒன்பதாவது நாள் என்பது வழக்கமாக நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளாக இருக்கும். இது ஞானத்தை வழங்கும் கலைமகளான சரஸ்வதி தேவியை வழிபடுவதற்குரிய நாளாகும். இந்த ஆண்டு நவராத்திரி மொத்தம் பத்து நாட்கள் விழாவாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதால் இந்த ஆண்டு நவராத்திரியின் ஒன்பதாவது நாள் சரஸ்வதியை வழிபடுவதற்குரிய நாளாக அமைந்துள்ளது. இந்த நாளில் சரஸ்வதியின் அருளை பெறுவதற்கு எப்படி வழிபட வேண்டும், என்ன மலர், நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.




நவராத்திரி 9ம் நாள் வழிபாடு


அம்பிகையின் பெயர் - பரமேஸ்வரி

கோலம் - தாமரை வகை கோலம்

மலர் - தாமரை

இலை -மரிக்கொழுந்து

நைவேத்தியம் - சர்க்கரை பொங்கல்

சுண்டல் - கொண்டைக்கடலை சுண்டல்

பழம் - நாவல் பழம்

ராகம் - வசந்தா

நிறம் - வெந்தயம் நிறம்


சொல்ல வேண்டிய மந்திரம் : 


மூல மந்திரம் :

"சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி 

வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா"


காயத்ரி மந்திரம் :

"ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே 

காமராஜாய தீமஹி 

தன்னோ தேவி பிரச்சோதயாத்"


அதோடு நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி தேவிக்குரிய சகலகலாவல்லி மாலையை குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் படிப்பது சிறப்பானதாகும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 குடியரசு தின விழா அணிவகுப்பில்.. தமிழ்நாட்டின் பசுமை மின் சக்தி ஊர்தி பங்கேற்பு

news

கவிதாயினியின் இரவுகள்!

news

புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்

news

ஒருபுறம் புதின் வீட்டின் மீது தாக்குதல்.. மறுபுறம் சமாதான முயற்சி.. உக்ரைன் ரஷ்யா.. தொடர் பதற்றம்!

news

எப்பப் பார்த்தாலும் உப்புமாதானா.. அப்படின்னு கேட்பவர்களுக்காக.. ஸ்பெஷல் கோதுமை ரவா பொங்கல்!

news

மகர விளக்கு பூஜைக்காக.. சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு

news

Cinema Nostalgia.. இன்று ஏன் இத்தகைய கருத்துப்படங்கள் அரிதாகின்றன?

news

நான் பாடும் மெளன ராகம்... A song that never ends!

news

எளியவர், ஏற்றம் கண்டவர்.. சுயசார்பு சிந்தனையை நடைமுறையில் காட்டியவர்!

அதிகம் பார்க்கும் செய்திகள்