சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி 2025 : வழிபடுவதற்கான நல்ல நேரம், வழிபடும் முறை

Sep 30, 2025,12:08 PM IST

நவராத்திரி பண்டிகையின் நிறைவாக கொண்டாடப்படுவது சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி ஆகும். இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை அக்டோபர் 01ம் தேதியும், விஜயதசமி அக்டோபர் 02ம் தேதியும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கல்வி, கலைகள், தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றை வைத்து வழிபடுவது வழக்கம். இதனால் சரஸ்வதி தேவியின் அருளால் தொழில்கள் சிறப்படையும், வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படும், துவங்கும் செயல்களில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. விஜயதசமி நாளில் வித்யாரம்பம் எனப்படும் குழந்தைகளுக்கு முதன் முதலில் கல்வியை துவக்கும் சடங்குகளும் நடத்தப்படுவது வழக்கம்.


சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வழிபடுவதற்கான நேரம் :




காலை 09.10 முதல் 10.20 வரை

காலை 10.40 முதல் 11.50 வரை

மாலை 04.30 முதல் 05.30 வரை

மாலை 6 மணிக்கு மேல்


விஜயதசமி, வித்யாரம்பம் வழிபடும் நேரம் :


காலை 07.45 முதல் 08.50 வரை

காலை 10.40 முதல் பகல் 12 வரை

மாலை 6 மணிக்கு மேல்


நவராத்திரியில் கொலு வைத்து வழிபட்டவர்கள் விஜயதசமி வழிபாடு நிறைவடைந்ததும் சில பொம்மைகளை சாய்த்து வைத்து, சனிக்கிழமை அன்று கொலு படிகளை எடுத்து விடலாம். அகண்ட தீபம் வைத்து வழிபட்டவர்கள் விஜயதசமி வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அதை குளிர செய்து விடலாம். படம் வைத்து வழிபட்டவர்களும் அன்றைய தினமே எடுத்து வைத்து விடலாம். கலசம் அமைத்து வழிபட்டவர்கள் சனிக்கிழமையில் கலசத்தை பிரித்து அதில் நீரில் வைத்து வழிபட்டிருந்தால் அந்த நீரை வீடு முழுவதும் தெளித்து விடலாம். அரிசி வைத்து வழிபட்டிருந்தால் அந்த அரிசியை சாமிக்கு சர்க்கரை பொங்கல் செய்து படைக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?

news

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்

news

ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு

news

அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

news

இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.. உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தேர்தல் நெருங்கும்போதுதான் எங்களது முடிவு.. அதுவரை சஸ்பென்ஸ்.. பிரேமலதா விஜயகாந்த்

news

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. வேகமாக முன்னேறும் தேஜகூ.. போராடும் ஆர்ஜேடி.. தடுமாறும் காங்.!

news

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் 2025.. டெபாசிட்டை இழக்கும் எதிர்க்கட்சிகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்