நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

Sep 19, 2024,01:10 PM IST

சென்னை:   தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் விற்பனை கண்காட்சி செப்டம்பர் 21 முதல் தொடங்க உள்ளது. 


மகளிரின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தொடங்கப்பட்ட திட்டம் தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள்.இந்த திட்டத்தின் மூலம்  பெண்கள் சுய தொழிலுக்கான வருவாய்களை ஈட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களை பயன்படுத்தி வருகிறது. மேலும் அவர்கள் தயாரிக்கும் பொருட்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கில் மாவட்டம் தோறும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நவராத்திரி விற்பனை கண்காட்சி ஒவ்வொரு வருடமும்  நடத்தப்பட்டு வருகிறது. 




நவராத்திரி விழா தொடங்கவுள்ளதைத்  தொடர்ந்து தற்போது இந்த விற்பனைக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் சேலைகள், பட்டுப் புடவைகள், கவரிங் நகைகள், வாலை நார்களால் செய்யும் பொருட்கள், பாரம்பரிய உணவுப் பொருட்கள், மண்பானைகள், கைவினைப் பொருட்கள், ஆர்கானிக் சோப்பு வகைகள், சிறு தானியங்கள், ஊறுகாய் வகைகள், எண்ணெய் வகைகள், மூலிகை பொருட்கள், சிறுதானிய தின்பண்டங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுவது வழக்கம். 


அந்த வரிசையில் இந்த வருடம் நவராத்திரி மற்றும் தீபாவளி விற்பனை கண்காட்சி வரும் செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நவராத்திரி விற்பனை கண்காட்சி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடைபெற உள்ளது. இங்கு சிறுதானியங்கள் முதல் நவராத்திரி கொலு பொம்மைகள் வரை விற்பனை செய்யப்பட உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?

news

முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

news

டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை

news

மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

news

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்

news

காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு

news

2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்

news

ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!

news

மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்