சண்டிகர்: ஹரியானா முதல்வராக இருந்து வந்த மனோகர் லால் கட்டாரும், அவரது அமைச்சரவையும் பதவி விலகியதைத் தொடர்ந்து, பாஜக எம்.பி. நயாப் சிங் சைனி தலைமையில் புதிய அரசு பதவியேற்கவுள்ளது.
ஹரியானாவில் பாஜக - ஜனநாயக ஜனதாக் கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பாஜகவின் மனோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வந்தார். இந்த நிலையில் பாஜகவுக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது ஜனநாயக ஜனதாக் கட்சி. இதையடுத்து மனோகர் லால் கட்டார் மற்றும் பாஜக அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

அப்போது குருஷேத்திரா லோக்சபா தொகுதி உறுப்பினரான பாஜகவின் நயாப் சிங் சைனி தலைமையில் புதிய பாஜக ஆட்சி பதவியேற்கவுள்ளது. 7 சுயேச்சைகள் மற்றும் ஜனநாயக ஜனதாக் கட்சியை உடைத்து கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாம். ஜனநாயக ஜனதாக் கட்சியிலிருந்து ஐந்து எம்எல்ஏக்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக பாஜக கூறி வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார் சைனி. தற்போது அவர் முதல்வர் பதவிக்கு உயர்கிறார்.
ஹரியானாவில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜகவுக்கும், ஜேஜேபி கட்சிக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இதனால்தான் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றது ஜேஜேபி தற்போது ஹரியானாவில் உள்ள 10 லோக்சபா தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக ஜேஜேபி கட்சி அறிவித்துள்ளது.
Paytm ஆப் வேலை செய்யுமா?.. மத்திய அரசு உத்தரவு கூறுவது என்ன?
சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!
Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்
Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)
தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?
மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்
Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?
கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!
குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!
{{comments.comment}}