"38 பெருசா.. 26 பெருசா.. தக்காளி சாதம் சாப்பிட முடியலைங்க என்னால".. ஜெயக்குமார் அதிரடி!

Jul 19, 2023,04:38 PM IST
சென்னை: பாஜக கூட்டணியில் 38 கட்சிகள் உள்ளன. எதிர்க்கட்சிகள் கூட்டணியில் 26 பேர்தான் உள்ளனர். 38 பெருசா, 26 பெருசா என்று கேட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் பேசினார். அப்போது அவரிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ஜெயக்குமார் பதிலளிக்கையில், டெல்லியில்  தேசிய ஜனநாயகக் கூட்டணி  கூட்டம் சிறப்பாக நடந்தது. அதில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகப் பெரிய  முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அதிமுகதான் மிகப் பெரிய சக்தி என்பது இந்திய அளவில் தெரிந்து விட்டது. அதனால்தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்றார் ஜெயக்குமார்.



எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, 38 பெருசா, 26 பெருசா. அவங்க 26 நாங்க 38. அப்ப 38தான் பெருசு. இதுதான் பலம் வாய்ந்த கூட்டணி. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொன்னது போல மிகப் பெரிய வெற்றி பெறுவோம். மகத்தான வெற்றியைப் பெறுவோம்.  தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார் ஜெயக்குமார். 

தக்காளி விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தக்காளி விலை உயர்வால் எங்க வீட்டில் தக்காளி சாதமே சாப்பிட முடியவில்லை என்று கூறி கலகலக்க வைத்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஓ.பி.எஸ். அழைக்கப்படாதது குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் பதிலளிக்கையில்,  ஓபிஎஸ் யாருங்க.. அவரை எப்படி அழைப்பாங்க. அவர் தனி மனிதர், இயக்கம் கிடையாது. இயக்கத்தைத்தான் அழைப்பாங்க என்றார் ஜெயக்குமார்.

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்