"38 பெருசா.. 26 பெருசா.. தக்காளி சாதம் சாப்பிட முடியலைங்க என்னால".. ஜெயக்குமார் அதிரடி!

Jul 19, 2023,04:38 PM IST
சென்னை: பாஜக கூட்டணியில் 38 கட்சிகள் உள்ளன. எதிர்க்கட்சிகள் கூட்டணியில் 26 பேர்தான் உள்ளனர். 38 பெருசா, 26 பெருசா என்று கேட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் ஜெயக்குமார் பேசினார். அப்போது அவரிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு ஜெயக்குமார் பதிலளிக்கையில், டெல்லியில்  தேசிய ஜனநாயகக் கூட்டணி  கூட்டம் சிறப்பாக நடந்தது. அதில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகப் பெரிய  முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அதிமுகதான் மிகப் பெரிய சக்தி என்பது இந்திய அளவில் தெரிந்து விட்டது. அதனால்தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்றார் ஜெயக்குமார்.



எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, 38 பெருசா, 26 பெருசா. அவங்க 26 நாங்க 38. அப்ப 38தான் பெருசு. இதுதான் பலம் வாய்ந்த கூட்டணி. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொன்னது போல மிகப் பெரிய வெற்றி பெறுவோம். மகத்தான வெற்றியைப் பெறுவோம்.  தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றார் ஜெயக்குமார். 

தக்காளி விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தக்காளி விலை உயர்வால் எங்க வீட்டில் தக்காளி சாதமே சாப்பிட முடியவில்லை என்று கூறி கலகலக்க வைத்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஓ.பி.எஸ். அழைக்கப்படாதது குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் பதிலளிக்கையில்,  ஓபிஎஸ் யாருங்க.. அவரை எப்படி அழைப்பாங்க. அவர் தனி மனிதர், இயக்கம் கிடையாது. இயக்கத்தைத்தான் அழைப்பாங்க என்றார் ஜெயக்குமார்.

சமீபத்திய செய்திகள்

news

சென்னை வாக்குப்பதிவில் சுவாரஸ்யம்.. சதவீதம் உயர்வு.. ஆனால் ஓட்டுப் போட்டவர்கள் குறைவுதான்!

news

Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

news

Siva Puranam: பிரபஞ்சத்தின் ஜோதிலிங்கமான.. சிவபெருமான்.. சிவபுராணம் (2)

news

தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியின் நிறைவு நாளை எப்படி கொண்டாடலாம்?

news

மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கோலாகல ஏற்பாடுகள் தீவிரம்

news

Cards Playing: சீட்டு விளையாடலாமா? விளையாடக்கூடாதா?

news

கூண்டுக்குள் வளர்க்காதீர்கள்: இன்றைய பெற்றோருக்கான புதிய சவால்!

news

குழந்தைகளும் கைபேசியும்: பொம்மலாட்டம் வழி ஒரு விழிப்புணர்வு!

news

அன்பும், கருணையும் கலந்து உருவான உலகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்