நெல்லை : கனமழை எச்சரக்கை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றத்த தாழ்வுநிலை காரணமாக நெல்லை, கன்னியாக்குமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் ஏற்கனவே கொட்டி தீர்த்து வரும் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் அணைகளில் இருந்து அதிக அளவிலான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழை ஒருபுறம், வெள்ளம் ஒரு புறம் என நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் பெரு அவதிக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நெல்லை மாவட்டம் கூடங்குளம், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மிக அதிக அளவில் மழை அளவு பதிவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!
சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு
என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி
சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு
விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு
{{comments.comment}}