நெல்லை : கனமழை எச்சரக்கை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றத்த தாழ்வுநிலை காரணமாக நெல்லை, கன்னியாக்குமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் ஏற்கனவே கொட்டி தீர்த்து வரும் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் அணைகளில் இருந்து அதிக அளவிலான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழை ஒருபுறம், வெள்ளம் ஒரு புறம் என நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் பெரு அவதிக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நெல்லை மாவட்டம் கூடங்குளம், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மிக அதிக அளவில் மழை அளவு பதிவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}