இளைஞர்களின் மனம் கவர்ந்த.. டிராகன்.. மார்ச் 21ல் ஓடிடியில் வெளியீடு.. Netflix அறிவிப்பு..!

Mar 18, 2025,02:43 PM IST
சென்னை: ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், உருவான டிராகன் திரைப்படம் வரும் மார்ச் 21 முதல் ஓடிடியில் வெளியாக இருப்பதாக netflix நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில், அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில், நடிகர்  பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், கே.எஸ் ரவிக்குமார், கௌதம் மேனன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது‌. அதாவது படிப்பின் அவசியத்தை மையமாகக் கொண்டு குறுக்கு வழியில் சென்று பணம் ஈட்டினால் எந்த அளவிற்கு அது நிரந்தரமாக இருக்கும். 

தே சமயத்தில் உண்மையாகவும் நேர்மையாக உழைத்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற கருத்தை இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற பாணியில் மனதில் பதியும்படி ஜாலியாக படம் உருவாக்கிய இயக்குனர் அனைவராலும் பாராட்டை பெற்றார். அதே சமயத்தில் இப்படம் வணிக ரீதியாக 100 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரிக்குவித்து  சாதனை படைத்தது.



 இப்படம் தற்போது வரை பல்வேறு  திரையரங்குகளிலும் வெற்றி நடை போட்டு வருகிறது. முன்னதாக இப்படம் வெளியாகும் முன்பே டிராகன் திரைப்படத்தின் உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றிருந்தது. ஆனால் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இந்த நிலையில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் வரும் மார்ச் 21ஆம் தேதி முதல் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம்,ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் வெளியிடப்படுவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!

news

விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!

news

தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்