கலிபோர்னியா: எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனத்தின் சோதனைத் திட்டத்தின் கீழ், மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர், தன மன ஓட்டத்துக்கு ஏற்ப கம்ய்யூட்டரில் வீடியோ கேம் விளையாடி வருகிறார். இதன் மூலம், இந்த தொழில்நுட்பம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய நவீன உலகில் பல வியத்தகு விந்தைகள் நடந்த வண்ணம் உள்ளன. நாளுக்கு நாள் விஞ்ஞானத்தின் வளர்ச்சிகளும், கண்டுபிடிப்புகளும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தொழில் நுட்பத்துறையில் முன்னோடியாக திகழும் எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் வயர்லெஸ் சிப் பொருத்தும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
வழக்கமாக மூளைதான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும். அதுதான் இயற்கை. ஆனால் மூளையை கட்டுப்படுத்துவதே எலான் மஸ்க் டீமின் நோக்கமாகும். இத்திட்டத்தின் மூலம் நரம்பியல் மருத்துவத்தில் உள்ள சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது. முதலில் குரங்குகளுக்கு சிப் பொருத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வெற்றியடைந்த நிலையில், தற்பொழுது மனித மூளையில் சிப் பொருத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மனிதனின் சிந்தனை மற்றும் எண்ணங்களை செயல்படுத்தும் வகையில் மூளைக்கும், கணினிக்குமான இணைப்பை உருவாக்கும் விதமாக இந்த சிப் மனித மூளையில் பொருத்தி சோதனை செய்யப்பட்டு வருகிறது.
முதன் முதலில் மூளைக்குள் சிப் பொருத்தப்பட்ட நபர் தற்போது தனது மனதில் நினைக்கும் சிந்தனைகள் மூலம் கணினியை கட்டுப்படுத்தி செஸ் விளையாடி வருகிறார். இந்த வீடியோவை நியூராலிங்க் நிறுவனம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இவரது பெயர் நோலண்ட் அர்பாக். 29 வயதான, இவருக்கு சமீபத்தில் ஒரு விபத்து நடந்துள்ளது. அந்த விபத்தில் இவரது மூளைக்கு செல்லும் நரம்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த நபர் சிப் பொருத்தப்பட்டு அதன் மூலம் லேப்டாப்பில் வீடியோ கேம்ஸ், செஸ் போட்டிகளை தனது சிந்தனை மூலம் விளையாடியுள்ளார்.
அவர் தனது சிந்தனையின் அடிப்படையில், லேப்டாப்பில் கர்சாரை நகர்த்தி செஸ் விளையாடி வருகிறார்.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}