மதுரை: தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான். தீபாவளி பண்டிகை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது புத்தாடைகளும் பட்டாசுகளும் தான் பிரதானம். குறிப்பாக புது டிரஸ் எடுக்க தீபாவளிதான் எல்லோருக்கும் பெஸ்ட் சீசன்.
இந்த நன்னாளில் நம் இல்லங்கள் தோறும் உறவினர்களுக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் அன்பை பரிமாறிக் கொள்ளும் விதமாக இனிப்புகளையும் பலகாரங்களையும் கொடுத்து தீபாவளி பண்டிகையின் பாரம்பரியத்தை பறைசாற்றுவர்.அப்படி வருடா வருடம் புதுத் துணிகள் அணிந்து பட்டாசு வெடித்து இல்லங்களில் மகிழ்ச்சி பொங்க தீபாவளியை வரவேற்க சிறுசுகளும் பெருசுகளும் எதிர்பார்த்து காத்து வருவது வழக்கம். அதிலும் பெண்களுக்கு ஏராளமான வித விதமான மாடல்களில் புது ஆடைகள் வரவு ஒவ்வொரு வருடமும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் ஆண்களுக்கு அதே சட்டை அதே பேண்ட் தான். அதை விட்டால் வேறு என்ன மாடல் என சலித்துக் கொள்ளும் ஆண்களும் இங்கு உள்ளனர்.

அதே நேரத்தில் இந்த வருடம் என்ன டிரஸ் ட்ரெண்டிங்கில் உள்ளது என பலரும் கடைகடையாக ஏறி இறங்கி தேடுவதையும் வழக்கமாகக் செய்து வருவர். ஏனெனில் கடந்த வருடம் இந்த மாடல் எடுத்தாச்சு. இந்த வருடம் நாம் என்ன வித்தியாசமான டிரஸ் எடுக்கலாம் அப்படின்னு யோசிச்சு இன்டர்நெட்லயும் சோசியல் மீடியாக்களையும் ஒரு ரவுண்டு போய் வருவோம்.
அப்படி காத்து வரும் இளைஞர்களுக்கு இந்த வருடம் என்ன புது மாடல்கள் புத்தாடைகள் சந்தைகளில் வந்திருக்கிறது என்பது தெரியுமா. வாங்க பார்ப்போம்.
இந்த வருடம் என்ன புத்தாடைகள் வாங்கலாம் என காத்திருக்கும் 2கே கிட்ஸ்களை கவரும் விதமாக சந்தைகளில் பாப்கான் மற்றும் டிஷ்யூ ரகங்கள் ஏராளமாக வந்துள்ளன. இந்த ரகங்கள் தற்போது இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.
பாப்கார்ன் என்பது நம் சாப்பிடும் உணவு பொருள் அல்ல. மாறாக பாப்கான் போன்றே தோற்றத்தில் புசுபுசுவென, மிகவும் மென்மையாக இருக்கக்கூடிய துணி ரகம். அதேபோன்று பிரிண்டட் செய்யப்பட்ட டிஷ்யூ ரகங்களும் முக்கிய இடத்தை பிடித்துள்ளன.
இந்த தீபாவளி புது வரவுகளை மக்கள் ஆர்வத்துடன் கேட்டு வாங்கி செல்கின்றனர். அத்துடன் மிகவும் மென்மையாக இருப்பதால் இந்த பாப்கான் மற்றும் டிஷ்யூ ரகங்களை தேர்வு செய்வதாக இளைஞர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
என்ன உங்க வீட்ல தீபாவளி பர்ச்சேஸ் ஆயிடுச்சா.. வாங்க நாமளும் ஒரு ரவுண்டு போய் பார்ப்போம்..!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}